I LOVE TAMILNADU.. சொல்றது யாரு தெரியுதா? உபி போலீசால் துன்புறுத்தப்பட்ட மருத்துவர் கபீல் கான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக்கொடுத்து உயிர்களை காப்பாற்றியதற்காகவும், யோகி அரசை விமர்சிக்கக்கூடாது என்பதற்காகவும் தன்னை நிர்வாணப்படுத்தி உணவு தராமல் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ள மருத்துவர் கபீல் கான், தமிழ்நாட்டில் வெறுப்புணர்வு இல்லை என்று கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆக்சிஜன் பற்றக்குறை காரணமாக 63 குழந்தைகள் உட்பட 80 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் கபீல் கான் தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து ஆக்சிஜன் சிலிண்டர்களை வரவழைத்து பல உயிர்களை காப்பாற்றினார். இல்லாவிட்டால் மேலும் பல குழந்தைகள் உயிரிழந்து இருக்கும்.

UP Doctor Kafeel Khan expressed his feeling about Tamilnadu and its medical facility

ஆனால், அதன் பிறகு மொத்த பழியும் கபீல் கான் மீதே விழுந்தது. இந்த விஷயத்தில் அரசின் அலட்சியப்போக்கை விமர்சித்த காரணத்தால் கபீல் கான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை கைது செய்து உத்தரப்பிரதேச போலீஸ் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது. இந்த வழக்குகளில் இருந்து கபீல் கான் விடுவிக்கப்பட்டாலும் உபி அரசு பல்வேறு துன்புறுத்தல்களை வழங்கியது. தொடர்ந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து உபி சிறையில் அடைத்து துன்புறுத்தப்பட்டார்.

பல நாள் சிறைவாசத்திற்கு பின் விடுவிக்கப்பட்ட கபீல் கான் தற்போது சென்னையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கோரக்பூர் குழந்தை மரணத்தை தொடர்ந்து தனக்கு நேர்ந்த அநீதி குறித்து கபீல் கான், "The Gorakhpur Hospital Tragedy: புத்தகம் ஒன்றை எழுதினார். இந்த நிலையில் இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தை அண்மையில் அவர் வெளியிட்டார்.

அந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கஃபீல் கான், "குழந்தைகள் உயிர்களை காப்பாற்றியதற்காக யோகி அரசால் பல வகைகளில் துன்புறுத்தப்பட்டேன். 5 நாட்கள் சிறையில் உணவும், குடிநீரும் தராமல் போலீஸ் துன்புறுத்தியது. பசியில் புற்களை பிடுங்கி தின்றேன். என்னை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கினார்கள். யோகி அரசு பற்றி தவறாக பேசக்கூடாது என்று மிரட்டினார்கள்.

UP Doctor Kafeel Khan expressed his feeling about Tamilnadu and its medical facility

தற்போது நான் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறேன். தமிழ் மக்கள் என்னை இஸ்லாமியராக பார்க்கவில்லை. குழந்தைகள் நல மருத்துவராக மட்டுமே பார்க்கின்றனர். இங்கு இருக்கும் மக்களிடம் எந்த வெறுப்பு உணர்ச்சியும் இல்லை. இங்கு மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக உள்ளன. பொதுத்தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவரால் மருத்துவராக முடியாது. நீட்டில் 20% எடுத்தவரால் மருத்துவராக முடியும் என்பது அநீதி இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் தமிழ்நாட்டை விரும்புகிறேன். இது அனைவரையும் உள்ளடக்குகிறது. இங்கு பன்முகத்தன்மை உள்ளது. இங்கு மனிதகுலத்தின் மீதான அன்பும் பாசமும் உள்ளது. இங்குள்ள ஆட்சியில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், நீதி உள்ளது. நீங்கள் எதை உடுத்த விரும்புகிறீர்கள், யாரை வணங்குகிறீர்கள், எதை உண்கிறீர்கள், யாரை விரும்புகிறீர்கள் என்பதை அனைவரும் மதிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+