முதல்ல ரூ.25 ஆயிரம்.. அப்புறம் ரூ.1 லட்சம்.. கடைசியா உரிமம் ரத்து.. பிளாஸ்டிக் பயன்படுத்தினா அபராதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் மசோதாவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டசபையில் தாக்கல் செய்தார்.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்,பால், தயிர், எண்ணெய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பேப்பர் கப்புகளை பொறுத்தவரை, பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து உற்பத்தி செய்தால், விலக்கு அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

சோதனையில் பறிமுதல்

சோதனையில் பறிமுதல்

பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து... பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்முறை என்பதால் தடையை மீறியவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது.

தாக்கலான மசோதா

தாக்கலான மசோதா

இந்நிலையில் பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அதில், பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.25 ஆயிரம் முதல் அபராதம்

ரூ.25 ஆயிரம் முதல் அபராதம்

அதில் இடம்பெற்றுள்ள மற்ற விவரங்கள் வருமாறு: முதல் முறை ரூ.25 ஆயிரம், 2வது முறை ரூ.50 ஆயிரம், 3வது முறையாக பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

ரூ.1 லட்சம் அபராதம்

ரூ.1 லட்சம் அபராதம்

பிளாஸ்டிக் சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல், விற்பனை, பகிர்ந்தளித்தால் ரூ. 1 லட்சம் வர அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி 4வது முறை பயன்படுத்தினால் உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும். வணிக வளாகம், துணிக்கடை, பல்பொருள் அங்காடிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மளிகை வியாபாரிகளுக்கு அபராதம்

மளிகை வியாபாரிகளுக்கு அபராதம்

மளிகைக் கடைகள், மருந்துக்கடைகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1000 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும். சிறிய வணிக விற்பனையாளர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+