Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கையில் காசு இல்லாவிட்டாலும்.. சென்னை மாநகர பேருந்துகளில் முதல் முறையாக வந்தது சூப்பர் வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் யுபிஐ மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி சோதனை அடிப்படையில் பல்லாவரம் பேருந்து பணிமனையில் இயங்கும் பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.. இதன் மூலம் கார்டு மற்றும் யுபிஐ, க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணிகள் கட்டணத்தை செலுத்த முடியும்.


சென்னை மாநகரத்தில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் ஓடுகின்றன. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களில் பெரும்பாலானோர் பேருந்துகளையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் சென்னை அரசு பேருந்துகளை பொறுத்தவரை இன்னும் பல படிநிலைகளில் முன்னேற்றம் நடக்க வேண்டியுள்ளது.

UPI Ticket in mtc: Super facilities are available for the first time in Chennai city buses

அனைவரும் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு பல்வேறு வசதிகளை அதிகரிக்க வேண்டி உள்ளது. ஏசி பேருந்துகளை அதிகரிப்பது, சில வழித்தடங்களில் அதிக பேருந்துகளை இயக்குவது, பேருந்து நிலையங்களில் கழிவறை வசதிகள் போன்றவை முக்கியமாக உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதேபோல் யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.

இந்நிலையில் யுபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. யுபிஐ சேவையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வர தமிழக அரசு சோதனை அடிப்படையில் சென்னையில் முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதாவது, முதல்கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளின் நடத்துநா்களுக்கு யுபிஐ மற்றும் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை மாநகர போக்குவரத்துக்கழகம் வழங்கி இருக்கிறது.

கிளாம்பாக்கம் வரை இல்லை.. நாளை முதல் சென்னை மக்களுக்கு நல்ல செய்தி.. இனி ரொம்ப ஈஸி

தொடுதிரை வசதி கொண்ட இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தையும் தோ்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. மேலும், இக்கருவி மூலம் கார்டு மற்றும் யுபிஐ, க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

சோதனைத் திட்டமாக இதை மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்தி உள்ளது. அதன் வெற்றி, பயன்பாடு, நிறை- குறைகளை கருத்தில் கொண்டு சென்னையிலுள்ள மற்ற பணிமனைகளுக்கும் இக்கருவிகள் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+