கையில் காசு இல்லாவிட்டாலும்.. சென்னை மாநகர பேருந்துகளில் முதல் முறையாக வந்தது சூப்பர் வசதி
சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் யுபிஐ மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி சோதனை அடிப்படையில் பல்லாவரம் பேருந்து பணிமனையில் இயங்கும் பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.. இதன் மூலம் கார்டு மற்றும் யுபிஐ, க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணிகள் கட்டணத்தை செலுத்த முடியும்.
சென்னை மாநகரத்தில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் ஓடுகின்றன. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களில் பெரும்பாலானோர் பேருந்துகளையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் சென்னை அரசு பேருந்துகளை பொறுத்தவரை இன்னும் பல படிநிலைகளில் முன்னேற்றம் நடக்க வேண்டியுள்ளது.

அனைவரும் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு பல்வேறு வசதிகளை அதிகரிக்க வேண்டி உள்ளது. ஏசி பேருந்துகளை அதிகரிப்பது, சில வழித்தடங்களில் அதிக பேருந்துகளை இயக்குவது, பேருந்து நிலையங்களில் கழிவறை வசதிகள் போன்றவை முக்கியமாக உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதேபோல் யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.
இந்நிலையில் யுபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. யுபிஐ சேவையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வர தமிழக அரசு சோதனை அடிப்படையில் சென்னையில் முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதாவது, முதல்கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளின் நடத்துநா்களுக்கு யுபிஐ மற்றும் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை மாநகர போக்குவரத்துக்கழகம் வழங்கி இருக்கிறது.
கிளாம்பாக்கம் வரை இல்லை.. நாளை முதல் சென்னை மக்களுக்கு நல்ல செய்தி.. இனி ரொம்ப ஈஸி
தொடுதிரை வசதி கொண்ட இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தையும் தோ்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. மேலும், இக்கருவி மூலம் கார்டு மற்றும் யுபிஐ, க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
சோதனைத் திட்டமாக இதை மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்தி உள்ளது. அதன் வெற்றி, பயன்பாடு, நிறை- குறைகளை கருத்தில் கொண்டு சென்னையிலுள்ள மற்ற பணிமனைகளுக்கும் இக்கருவிகள் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications