ஐஏஎஸ், ஐபிஎஸ் காலிப்பணியிடங்கள்.. யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் இன்று முதல் தொடங்கியது!
சென்னை: 2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று அடுக்குகளை கொண்டுள்ளது.
நாட்டில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி சிவில் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. மேற்குறிப்பிட்டதைப்போல மூன்று அடுக்குகளாக நடத்தப்படும் இந்த தேர்வின், முதல் தேர்வான 'முதல்நிலை தேர்வு' கடந்த மே மாதம் 28ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 1,105 காலி இடங்களுக்கு இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் கடந்த ஜூன் 12ம் தேதி வெளியாகியிருந்தது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு இன்று தொடங்குகிறது. இது 9 எழுத்துத்தேர்வுகளை உள்ளடக்கியதாகும். இன்று தொடங்கும் தேர்வுகள் செப்டம்பர் மாதம் 16, 17, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் மாதம் இதற்கான முடிவுகள் வெளிவரும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டெல்லியில் நேர்காணல் தேர்வு நடைபெறும். தேர்வு குறித்த விரிவான விவரங்கள் https://upsc.gov.in/ எனும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications