UPSC தேர்வு முடிவுகள்.. அகில இந்திய அளவில் தமிழக மாணவி ராஜேஸ்வரி 2ஆம் இடம்! மற்றொரு மாணவர் 7வது இடம்
சென்னை: குடிமைப் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வு இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. அகில இந்திய அளவில் 958 பேர் யுபிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி 2வது இடத்தையும் ராஜா மொகைதீன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 7வது இடம் பிடித்துள்ளார்
இந்தியாவில் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான காலியிடங்கள் யுபிஎஸ்சி தேர்வுகள் அடிப்படையில் நிரப்பப்படும். அதன்படி கடந்த 2025ல் நடந்த யுபிஎஸ்சி தேர்வுகளின் இறுதி முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகள் இதில் தான் நிரப்பப்படும்.

கடந்த யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாடு முழுக்க 958 பேர் யுபிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொது பிரிவில் இருந்து அதிகபட்சமாக 317 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து ஓபிசி பிரிவில் இருந்து 306 பேரும், எஸ்சி பிரிவில் இருந்து 158 பேரும், எஸ்டி பிரிவில் இருந்து 73 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் இந்தாண்டு இறுதி தேர்வாக நடத்தப்படும் நேர்காணல்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் 140 பேர் கலந்து கொண்டிருந்தனர். இதில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு டாப் 10 இடங்களுக்குள் தமிழ்நாடு மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ராஜேஸ்வரி என்ற மாணவி தேசியளவில் 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ராஜேஸ்வரி இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் துணை ஆட்சியராக வேலை செய்து வருகிறார். அவர் தான் யுபிஎஸ்சி தேர்விலும் அகில இந்திய அளவில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அதேபோல ராஜா மொகைதீன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 7வது இடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் டாப் 10 இடங்களுக்குள் வந்ததே இல்லை. கடைசியாக 2015ல் சரண்டா அரி அகில இந்திய அளவில் 7வது பிடித்திருந்தார். அதன் பிறகு இப்போது தான் டாப் 10க்குள் தமிழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications