பெரியார் பெயருக்கு பின்னால் ‘சாதி’.. யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் சர்ச்சை! அதிர்ந்துபோன தேர்வர்கள்!
சென்னை: மத்திய அரசின் UPSC தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின், சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக அறிவித்திருந்தார் பெரியார். ஆனால், யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் பெரியார் பெயருக்குப் பின்பு சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு - முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட் கடந்த 13ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில், யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. காலை 9.30 மணி மற்றும் மதியம் 2.30 மணி என இரண்டு தாள் தேர்வுகளாக நடைபெறுகிறது. இந்த தேர்வை, சென்னையில் மட்டும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் உட்பட 24,364 பேர் எழுதுகின்றனர்.
இன்று காலை தொடங்கி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியார் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற ஒரு கேள்வியில், 'சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்?' என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதன் கீழ் 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பி.ஆர்.அம்பேத்கர், பாஸ்கர் ராவ் ஜாதவ், தினகர் ராவ் ஜவால்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக அறிவித்திருந்தார் பெரியார். சாதி ஒழிப்புக்காக போராடிய ஈ.வெ.ராமசாமியின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி











Click it and Unblock the Notifications