பெரியார் பெயருக்கு பின்னால் ‘சாதி’.. யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் சர்ச்சை! அதிர்ந்துபோன தேர்வர்கள்!
சென்னை: மத்திய அரசின் UPSC தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின், சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக அறிவித்திருந்தார் பெரியார். ஆனால், யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் பெரியார் பெயருக்குப் பின்பு சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு - முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட் கடந்த 13ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில், யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. காலை 9.30 மணி மற்றும் மதியம் 2.30 மணி என இரண்டு தாள் தேர்வுகளாக நடைபெறுகிறது. இந்த தேர்வை, சென்னையில் மட்டும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் உட்பட 24,364 பேர் எழுதுகின்றனர்.
இன்று காலை தொடங்கி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியார் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற ஒரு கேள்வியில், 'சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்?' என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதன் கீழ் 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பி.ஆர்.அம்பேத்கர், பாஸ்கர் ராவ் ஜாதவ், தினகர் ராவ் ஜவால்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக அறிவித்திருந்தார் பெரியார். சாதி ஒழிப்புக்காக போராடிய ஈ.வெ.ராமசாமியின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
சென்னை மக்களே 'கரண்ட் பில்' இன்னும் கட்டவில்லையா.. மின்சார வாரியம் மிக முக்கிய அறிவிப்பு -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் -
மண்டைக்கேறிய போதை.. ரம்யாவின் படுக்கையறையில் புகுந்த சென்னை போலீஸ்காரர்.. மறு நொடியே பிக் ட்விஸ்ட் -
யுபிஎஸ்சி தேர்வில் 56 பேர் தேர்ச்சி! நான் முதல்வன் திட்டத்தின் முதற்பகுதியே இப்படியா? ஸ்டாலின் -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ? -
காது மடல் ஓட்டைகளுக்கு ஆபரேஷன்! சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மும்பை இன்ஸ்டா பிரபலம் கைது! -
சென்னை ரிசார்ட்டில் பல் மருத்துவர் செய்த காரியம்.. ₹11 லட்சத்துக்காக பவர் பத்திரத்தில் ஆடிய ஆட்டம்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க












Click it and Unblock the Notifications