Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியப் பெருங்கடலில்.. ஈரான் போர்க்கப்பலை தாக்கி வீழ்த்திய அமெரிக்கா.. வெளியான ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: "பழிக்குப் பழி... ரத்தத்திற்கு ரத்தம்!" - சர்வதேச அரசியலில் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை தனது விஸ்வரூபத்தைக் காட்டியுள்ளது. இலங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் வைத்து ஈரானின் அதிநவீன போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது இப்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிலன் 2026: பயிற்சியை முடித்து திரும்பியபோது நேர்ந்த விபரீதம்

இந்தியாவில் கோலாகலமாக நடந்த 'மிலன் 2026' (MILAN 2026) சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு, கம்பீரமாகத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தது ஈரானின் 'மௌஜ்' (Mowj-class) ரகத்தைச் சேர்ந்த 'தேனா' (Dena) போர்க்கப்பல். மார்ச் 4-ம் தேதி இலங்கை கடற்பரப்புக்கு அருகே சர்வதேச கடல் எல்லையில் பயணித்துக் கொண்டிருந்தபோதுதான், கடலுக்கு அடியில் மறைந்திருந்த அமெரிக்க எமன் தனது வேலையைக் காட்டியுள்ளது.

USA attacked an Iran ship in Indian ocean Marine relased the official attack video

"கடைசி சிரிப்பு எங்களுடையது!" - அமெரிக்காவின் அதிரடி விளக்கம்

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் (Secretary of War) பீட் ஹெக்செத் (Pete Hegseth) வெளியிட்டுள்ள அறிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அவர் கூறுகையில்:

"சர்வதேச கடற்பரப்பில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் நினைத்தது. ஆனால், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஏவிய டார்பிடோ அந்தப் போர்க்கப்பலை சமாதி ஆக்கிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, டார்பிடோ மூலம் ஒரு எதிரி நாட்டுப் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடிப்பது இதுவே முதல்முறை!"

மேலும் அவர் ஒரு அதிர்ச்சித் தகவலையும் உடைத்தார். "அதிபர் ட்ரம்ப்பைக் கொல்ல முயன்ற ஈரான் குழுவின் தலைவன் நேற்று வேட்டையாடப்பட்டான். ட்ரம்ப்பைக் கொல்ல ஈரான் முயன்றது, ஆனால் இறுதிச் சிரிப்பு ட்ரம்ப்புடையதாக அமைந்தது," எனப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

148 பேர் மாயம்: நடுக்கடலில் நடந்த கோரத் தாண்டவம்

இந்தத் தாக்குதலின் வீரியத்தில் 'தேனா' கப்பல் நொடிப் பொழுதில் கடலுக்குள் மூழ்கியது.

மீட்கப்பட்டவர்கள்: 32 வீரர்கள் மிகக் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாயமானவர்கள்: கப்பலில் இருந்த 148 வீரர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உலகப் போர் மேகங்கள்?

இஸ்ரேல் - ஈரான் மோதல் ஒருபுறம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா நடத்தியுள்ள இந்த நேரடித் தாக்குதல், பிராந்திய அமைதியைச் சிதைத்துள்ளது. இலங்கையை ஒட்டியுள்ள கடற்பரப்பில் வல்லரசு நாடுகளின் இந்த மோதல், தெற்காசிய நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்கா ஏன் தாக்க வேண்டும்?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போர் தற்போது இந்தியப் பெருங்கடல் வரை நீண்டுள்ளது.

பழிவாங்கல் நடவடிக்கை: வளைகுடாப் பகுதியில் அமெரிக்கக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானின் சரக்குக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிகள் குறிவைத்திருக்கலாம்.

கண்காணிப்பு பலவீனம்: இலங்கையின் கடல் எல்லைக்குள் அமெரிக்காவின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், அவர்களின் ராடார் பார்வையில் படாமல் ஒரு நீர்மூழ்கித் தாக்குதல் நடத்தப்படுவது கடினம். எனவே, இது அமெரிக்காவின் திட்டமிட்ட 'ஆபரேஷனாக' இருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

"இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம் நம் மண்ணில் எவ்வளவு ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதைக் காட்டுகிறது," என இலங்கை நாட்டு தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஈரான் இதற்கு எப்படிப் பதிலடி கொடுக்கப் போகிறது? அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+