சிலம்பத்தில் அசத்திய மதுரைச் சிறுவன்! அமெரிக்காவின் உலக சாதனைக் குழு சான்றிதழ்!
சென்னை: சிலம்பத்தில் அசத்திய மதுரைச் சிறுவனுக்கு அமெரிக்காவின் உலக சாதனைக் குழு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழர்களின் தற்காப்பு கலைகளில் முதன்மையான கலையாக திகழ்கிறது சிலம்பம். போர்க்கலையாக மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு சிறந்த உடற்பயிற்சி விளையாட்டாகவும் சிலம்பம் அமைந்துள்ளது. சிலம்பம் கற்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்கிற வகையில் 7 வயது முதல் எத்தனை வயது வரையில் வேண்டுமானாலும் கற்கலாம்.

அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த சிறுவன் தனது சிலம்பம் சுற்றும் திறனால் அமெரிக்காவின் உலக சாதனைக் குழு சான்றிதழை பெற்று பெற்றொருக்கும், பிறந்த ஊரான மதுரைக்கும் பெருமைத் தேடித்தந்துள்ளார். சிலம்பம் சுற்றுவது என்பது தனிக்கலை. நினைத்தவர்கள் எல்லாம் சிலம்பாட்டம் ஆடி விட முடியாது. சிலம்பம் விளையாடும்போது விளையாடுபவர், தன்னுடன் விளையாடுபவர்க்கு தாம் எவ்வாறு கம்பை பயன்படுத்தப்போகிறோம் என்பதைத் தெரியாமல் கம்பை மறைப்பதற்குப் பெயர் பதுக்கல்.

மேல் வீச்சு, கீழ் வீச்சு, உச்சி வெட்டு, முகவாள் வெட்டு, எறி குத்து என சிலம்பாட்டத்தில் பல நெளிவு சுளிவுகளும், சூட்சுமங்களும் உள்ளன. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சிறுவன் கலை இளமணி ஜெ.அதீஸ்ராம் கடந்த 2023 டிசம்பர் 24 அன்று மதுரை, புளியங்குளம், கேரன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றுதலில் 90 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்து சாதனை புரிந்தார். இச்சாதனையை அங்கீகரித்து அமெரிக்காவில் உள்ள உலக சாதனைக் குழு (World Record Committe) 28.02.2024 அன்று சான்றிதழ் அளித்துள்ளது.
'தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்ப விளையாட்டில் பெயர் பெற்ற மதுரையைச் சேர்ந்த சிறுவன் ஜெ. அதீஸ்ராம் ஸ்கேட்டிங் செய்து கொண்டே, சிலம்பம் சுற்றுதலில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பங்கேற்று முதல் பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications