Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாச்சாத்தி.. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை.. 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் தர நீதிபதி ஆணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாச்சாத்தி மலை கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கோ அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி வேல்முருகன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, 1992ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கிராமத்தையே சூறையாடிய அதிகாரிகள் அங்கிருந்த இளம்பெண்கள் 18 பேரை பலாத்காரம் செய்து சிதைத்தனர்.

Vachathi case High court order Govt jobs for the victims Rs. 10 lakh relief each for 18 women

ஏழைகளின் சொல் அப்போது அம்பலம் ஏறவில்லை. ஓராண்டு கழித்துதான் வெளி உலக வெளிச்சத்திற்கு வந்தது. நீதிமன்ற கதவை தட்டினர் பாதிக்கப்பட்டவர்கள். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதில் நீதி வென்றது. கடந்த 2011ஆம் ஆண்டு 9 ஆண்டுகள் கழித்து நீதி கிடைத்தது.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Vachathi case High court order Govt jobs for the victims Rs. 10 lakh relief each for 18 women

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அவர் அளித்த தீர்ப்பு வாச்சாத்தி மலை கிராம மக்களின் மனங்களில் ஏற்பட்ட ரணங்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது. வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி வேல்முருகன் உறுதி செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களிடம் ரூ.5 லட்சம் வசூலிக்க வேண்டும். மேலும், அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+