சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் உடம்பு நடுங்கியது.. பேரிடி போல் தலையில் விழுந்துவிட்டது.. முராத் புகாரி மறைவால் கலங்கிய வைகோ!

Google Oneindia Tamil News

சென்னை : முராத் புகாரி மறைந்த செய்தி பேரிடி போல் என் தலையில் விழுந்துவிட்டது. எப்படி மறப்பேன் அந்த முகத்தை; அவர் பாசத்தை.. இனி ஒருவரை அப்படிக் காண முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.

மதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளரும், புகாரி ஹோட்டல் குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவருமான முராத் புகாரி நேற்று காலமானார்.

முராத் புகாரி மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், வேதனையைப் பகிர்ந்துள்ளார் வைகோ.

முராத் புகாரி மறைவு காரணமாக 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கஞ்சா விற்ற 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை! சமூக விரோதிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த தீர்ப்பு! கஞ்சா விற்ற 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை! சமூக விரோதிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த தீர்ப்பு!

உடம்பெல்லாம் நடுங்கியது

உடம்பெல்லாம் நடுங்கியது

மதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவுச் செய்தியால் நிலைகுலைந்து போயுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளரும், புகாரி ஹோட்டல் குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவருமான முராத் புகாரி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேள்விப்பட்டபோது, என் உடம்பெல்லாம் நடுங்கியது. கழகத்தின் ஆணிவேர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் அவர்.

நெஞ்சை விட்டு அகலவில்லை

நெஞ்சை விட்டு அகலவில்லை

ஒவ்வொரு ஆண்டும் இசுலாமியர்களின் இப்தார் நிகழ்ச்சியை எந்தக் கட்சியிலும் நடத்தாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் பங்கெடுக்கின்ற நிகழ்ச்சியாக நடத்தி வந்தார். ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் கூட்டத்தன்றும் நண்பகல் உணவைத் தயாரித்துக் கொண்டுவந்து தருவார். அழகான தோற்றம் கொண்டவர். மலர்ந்த முகத்தோடு, மாறாத புன்சிரிப்போடு அவர் உலவுகின்ற காட்சி என் கண்ணை விட்டும், நெஞ்சை விட்டும் அகலவில்லை. நான் எத்தனையோ துக்கங்களைத் தாங்கி இருக்கிறேன்.

 பேரிடி விழுந்துவிட்டது

பேரிடி விழுந்துவிட்டது

ஆனால் இது பேரிடி போல் என் தலையில் விழுந்துவிட்டது. எப்படி மறப்பேன் அந்த முகத்தை; அவர் பாசத்தை; அவர் காட்டிய எல்லையில்லாத அன்பை. இனி ஒருவரை அப்படிக் காண முடியாது நான். கழகத்தால் மூன்று நாட்கள் இந்தத் துக்கம் கடைபிடிக்கப்படும். ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படும். 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படும்.

நொறுங்கிப் போய்விட்டேன்

நொறுங்கிப் போய்விட்டேன்

யாரால் எனக்கு ஆறுதல் சொல்ல முடியும். நான் நொறுங்கிப் போய்விட்டேன். பொங்கி வரும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத் தோழர்கள் இந்த அறிவிப்பின்படி துக்கம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Murad Buhari, MDMK minority wing secretary and one of the owners of Bukari Hotels Group, passed away. MDMK General Secretary Vaiko has condoled Murad Buhari demise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X