பாஜகவை 70 சதவீதம் லெஃப்ட், ரைட், செண்டர் என தாக்கி பேசினேன்.. ஆனால் காங்கிரஸை.. வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என மறைந்த பிரதமர் வாஜ்பாய் எங்களிடம் சொல்லவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை கடந்த வாரம் மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியது.

லெப்ட் ரைட்

லெப்ட் ரைட்

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து வைகோ கடும் கேள்விக் கணைகளை தொடுத்துவிட்டார். அப்போது காங்கிரஸ் குறித்தும் லெப்ட் ரைட் வாங்கிவிட்டார்.

வசைப்பாடுதல்

வசைப்பாடுதல்

இந்த நிலையில் மோடியோ காஷ்மீர் பிரச்சினையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவை நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து வைகோ கூறுகையில் என்னை யார் வசைப்பாடினாலும் கவலையில்லை.

நிறைவேற்றி

நிறைவேற்றி

காங்கிரசை விட பாஜகவை தான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கி பேசியிருக்கிறேன். காஷ்மீரில் பிரச்சினையில் வாஜ்பாய் கனவை நிறைவேற்றி விட்டோம் என பிரதமர் மோடி கூறுவது தவறு.

காஷ்மீர்

காஷ்மீர்

370 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என வாஜ்யபாய் எங்களிடம் சொல்லவில்லை. பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நேரு நிறைவேற்றவில்லை. என்னுடைய பேச்சில் நான் 30 சதவீதம்தான் காங்கிரஸை தாக்கி பேசியுள்ளேந். 70 சதவீதம் பாஜகவை லெஃப்ட் , ரைட், செண்டர் என தாக்கி பேசியுள்ளேன். பாஜக நெருப்போடு விளையாடுவதாக சொன்னேன். இந்தியா துண்டு துண்டாக போகும் என்று சொன்னேன் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+