Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூச்சை நிறுத்திக்கொண்டதா மும்பைக் குயில்? போய் வா பாட்டரசி! ஆஷா போஸ்லேவுக்கு வைரமுத்து இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைக்குயில் ஆஷா போஸ்லேவின் மறைவு, திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில், அவரது மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

Vairamuthu

ஆஷா
மறைந்துற்றாரா!

பறந்து விட்டாரா
பாதி லதா?

மூச்சை நிறுத்திக்கொண்டதா
மும்பைக் குயில்?

வயதைத்
தீர்மானிக்க முடியாத
தீங்குரல்

சொற்களுக்கு வலிக்குமென்று
வருடிவிடும் மயிலிறகு மனசு

இந்திய மொழிகளையெல்லாம்
உள்வாங்கி உச்சரித்த உதடு

இனி இல்லையா?

நனைந்த துணியாய்க்
கனக்கிறது இதயம்

"வெண்ணிலா
வெண்ணிலா
வெண்ணிலாவே
வந்ததே முதற்காதல்"

அந்தக் குரல் வசீகரத்தால்
முதல் மீசை முளைத்தது
என் வார்த்தைகளுக்கு

போய்வா பாட்டரசி!

உன் குரல்
பாடிக்கொண்டே இருக்கும்
இந்தியக் காற்றில்
என்றென்றும்"

என தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். திரைத்துறையினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் ஆஷா போஸ்லேவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+