அரசின் வருமானத்துக்காக மக்கள் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா.. வைரமுத்து காட்டம்
டாஸ்மாக்கை நடத்தி வரும் தமிழக அரசை வைரமுத்து விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: அரசின் வருமானத்துக்காக மக்கள் எல்லாரும் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா? என்று கவிஞர் வைரமுத்து காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ் பாடலாசிரியர்களிலேயே, சமூக அவலங்களுக்கு எதிராக அடிக்கடி குரல் கொடுத்து கொண்டிருப்பதில் முதன்மையானவரும், முக்கியமானவரும் கவிஞர் வைரமுத்துதான்.
சமூகத்துக்கு எதிரான சம்பவங்களை பேட்டிகள் மூலமாகவும், கவிதை வடிவிலும் அதனை வெளிப்படுத்த தயங்காதவர் வைரமுத்து.

வைரமுத்து கருத்து
அந்த வகையில், உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பல தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், வைரமுத்துவும் தன் கருத்தினை தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தோல்வி
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய போது, 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது என்றும் உயர்சாதியினருக்கான இந்த இடஒதுக்கீடு, சமூக நீதிக்காக கால் நூற்றாண்டுவரை போராடிய தமிழ் தலைவர்களுக்கு தோல்வி என்றும் வைரமுத்து தெரிவித்தார்.

மயங்க வேண்டுமா?
கிராமங்களில் அதிகமாக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட முக்கிய காரணமே மதுதான் என்று கூறிய வைரமுத்து, தமிழக அரசின் வருமானத்திற்காக 20 சதவீதம் மக்கள் மதுபோதையில் மயங்கி கிடக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

கொள்கை முடிவு
தற்போது ஆட்சியில் உள்ள அரசும் சரி, இதற்கு பின் வரப்போகின்ற அரசும் சரி மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்தால் தமிழர்கள் கொண்டாடுவர் எனக்கூறினார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications