ஸ்விட்சர்லாந்தில் துப்பாக்கியுடன் வைரமுத்து! கவிதை போர் வெடிக்கட்டும்! நெட்டிசன்கள் கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்விட்சர்லாந்தில் எடை குறைந்த, இயக்க எளிதான எஸ்ஐஜி 550 துப்பாக்கியை ஏந்தி கொண்டு கவிஞர் வைரமுத்து போஸ் கொடுத்துள்ளார். மேலும் துப்பாக்கி சுடும் பயிற்சியை தன்னால் கற்க முடியவில்லையே என்றும் அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

vairamuthu switzerland

நான் ஏந்தியிருக்கும்
எஸ்.ஐ.ஜி 550 துப்பாக்கி
ஏ.கே 47ஐக் கடைந்தெடுத்தது
மற்றும் கடந்தது

எடை குறைந்த
இயக்க எளிதான
துல்லியத் துப்பாக்கி இது

சுவிட்சர்லாந்து
பள்ளிக் கல்வியில்
இது வீரப் பயிற்சிக்கு
வினைப்படுகிறது;
ராணுவ சேவைக்கு
விதையிடுகிறது

இந்தப் பயிற்சி
தன்னம்பிக்கை ஊட்டித்
தன்னெழுச்சி தருவதாக
நண்பர் கல்லாறு சதீஷின் மகள்
இனிஷா தெரிவித்தார்

தோட்டாத் தூணியை நிரப்புதல்
நெம்புதல்
விசை முடுக்கல்
சுடுகுறி பார்த்தல்
சுடல் என்பன
இதன் படிநிலைகள்

விருப்பமுள்ளவர்கள்
பயிற்சிபெறக்
கல்வித் திட்டங்கள்
கைதட்டி வரவேற்க வேண்டும்

தோழன் செய்யாததைத்
துப்பாக்கி செய்யும்

எனக்கு இந்தப் பயிற்சி
இல்லையே என்று - நான்
குறைமனிதனாய்க்
குமுறுகிறேன்

இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

vairamuthu switzerland

துப்பாக்கியை தூரிகை ஆக்கி
தோட்டாக்களால் துளையிடுங்கள்
கவிதை போர் ஒன்று வெடிக்கட்டும்! இவ்வாறு ஒரு நெட்டிசன் கவிதை நடையில் தெரிவித்துள்ளார்.

vairamuthu switzerland

இயற்கையோடு போராடுகிறோம்

இனத்தோடும் போராட
வேண்டுமா

அதற்குத் தான் ஆயுதங்களா

இந்தத் துப்பாக்கி விளம்பரம்
நமக்கு வேண்டாமே

'பூ உலகமில்லை _இது
போர் உலகமடா
யார் கைகளுக்கும்_யுத்தம் தெரிந்தே இருக்குதடா
உத்தமன் வயிற்றில்
செத்ததை எடுத்தால்
மொத்தமும் குத்தமடா _ ஐயோ
எத்தனை யுத்தமடா'

இவ்வாறு ஒரு நெட்டிசன் கவிதை நடையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+