ஒடியா மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’.. நெகிழ்ச்சியுடன் சொன்ன வைரமுத்து!
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்' ஒடியா மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் 12வது மொழியாக ஒடியாவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது 'கள்ளிக்காட்டு இதிகாசம்'.
கவிஞர் வைரமுத்து எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'. வைகை அணை கட்டப்பட்ட போது, அங்கிருந்த காலி செய்யப்பட்ட 14 கிராமங்களை மையமாக கொண்டு 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை கவிஞர் வைரமுத்து எழுதினார்.

வைகை அணை பகுதி மக்கள், மண்ணோடும், வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை இந்த நாவலில் பதிவு செய்துள்ளார் வைரமுத்து. இந்த நாவலை 23 மொழிகளில் சாகித்ய அகாடமி நிறுவனம் மொழிபெயர்த்து வருகிறது. இந்தி, உருது, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ஒடியா மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கள்ளிக்காட்டு இதிகாசத்தை ஒடியா மொழியில் அஜய் குமார் பட்நாயக் மொழிபெயர்த்திருக்கிறார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:
கள்ளிக்காட்டு இதிகாசம்
ஒடியா மொழியில்
வெளிவந்துவிட்டது
ஒரிசாவின்
அதிகார மொழியாகவும்
ஜார்கண்டின் இரண்டாம்
அதிகார மொழியாகவும்
விளங்குவது ஒடியா
13ஆம் நூற்றாண்டில்
இலக்கிய மொழியாக
அறியப்பட்ட ஒடியா
5 கோடி மக்களால் பேசப்படுவது
புதிதாக வளர்க்கப்பட்ட
உரைநடையை விடப்
பாரம்பரியமான கவிதைமொழி
கொண்டது ஒடியா
பெரும் கவிஞர் சரள தாசர்,
சச்சிதானந்த ரௌத்ரே,
குருப்பிரசாத் மொகந்தி,
சௌபாக்ய மிஸ்ரா போன்ற
மூத்த படைப்பாளிகளாலும்
பக்கீர் மோகன் சேனாபதி,
மனோஜ் தாஸ், பிரதீபாராய் போன்ற
நவீனப் படைப்பாளிகளாலும்
செழுமைப் படுத்தப்பட்ட
ஒடியா மொழியில்
கள்ளிக்காட்டு இதிகாசம்
கலப்பது குறித்துப்
பெருமிதம் அடைகிறேன்
அஜய் குமார் பட்நாயக்
மொழிபெயர்த்திருக்கிறார்
இந்திய மொழிகளில்
கள்ளிக்காட்டு இதிகாசத்தின்
பன்னிரண்டாம் மொழிபெயர்ப்பு
இது.
நன்றி: சாகித்ய அகாடமி
எனத் தெரிவித்துள்ளார் வைரமுத்து.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications