பூவாக பூத்த காதல்.. உங்கள் கதைகளைச் சொல்லுங்கள்.. எங்கள் இதயங்களுக்கு!
சென்னை: இதோ இன்னும் ஒரு காதலர் தினம்.. காதலை ரசிப்பவர்களுக்குத்தான் ஆண்டுக்கு ஒரு காதலர் தினம்.. காதலர்களுக்கோ.. நித்தம் ஒரு பூ பூக்கும் காதல் தினம்தானே.
மனிதர்களின் இதயங்களை இதமாக்குவது காதல்.. சமூக பேதமைகளை தூக்கிப் போட்டு மிதித்து மனங்களை ஒருங்கிணைப்பது காதல்.. காதலிக்காத இதயங்கள் எங்கேனும் உண்டோ.. விலங்குகளுக்கும் உண்டு காதல்.. அதனால்தான் "ஆதலினால் காதல் செய்வீர்" என்று சொன்னான் பெருங்கவிஞன்.
இதைப் படிக்கும் நீங்களும் கூட காதலித்திருப்பீர்கள்.. அல்லது வாழ்வில் ஒருமுறையவது காதல் வயப்பட்டிருப்பீர்கள்..
"அது அம்பு விழி அல்ல பெண்ணே
அன்பு விழி
வழியும் காதலில்
அமிழும் என் மனம்
அழகாய்.."
இப்படியெல்லாம் நீங்களும் கூட கவிதை எழுதி களித்திருப்பீர்கள்.. அந்தக் காதல் மகானுபவத்தை எங்களுடன் பகிருங்கள்.. உங்கள் காதலை உலகத்துக்கு எடுத்துச் சொல்லுங்கள்.. உங்கள் உள்ளத்தில் உள்ளதை உரத்துச் சொல்லுங்கள்.
உங்கள் கதைகளை எங்களுக்கு தமிழில் அழகாக எடுத்துரையுங்கள்.. புகைப்படம் இருக்கா.. அனுப்பி வையுங்கள்.. பொங்கப் பொங்க கவிதை வருதா.. தாராளமாக வடித்து அனுப்புங்கள்.. வாருங்கள்.. காதலைக் கொண்டாடுவோம்.
உங்களது காதல் அனுபவங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: [email protected]