Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூடுவாஞ்சேரி டூ வண்டலூர்.. ஒத்திவாக்கத்தில் எதிரொலிக்கும் "டப்பு டப்பு".. மாஸ் போட்டி.. சபாஷ் டிஜிபி

Subscribe to Oneindia Tamil

வண்டலூர்: தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இன்று நடக்கும் நிறைவுநாள் போட்டியானது மிகுந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ளது ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளி.. இங்கு ஒவ்வொரு வருடமும், தமிழக அளவில் காவலர்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுவது வழக்கம்.

டிஜிபி: அந்தவகையில், இந்த வருடமும் போட்டி துவங்கி உள்ளது.. நேற்று தொடங்கிய போட்டி இன்றும் நடக்கிறது. இந்த இரண்டு நாட்கள் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை தமிழக டிஜிபி துவங்கி வைத்தார்.

Vandalur kanchipuram state level shooting competition tamil nadu dgp Sylendra Babu inaugurated

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நான்கு மண்டலங்கள் மற்றும் தனிப்பிரிவு அனைத்து காவல் ஆளிநர்களுக்காக நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் தேர்வான 11 அணிகளில் 198 ஆண் காவலர்களும், 44-பெண் காவலர்களும் என மொத்தம் 242 வீரர்கள் இந்த 2 நாள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.. இதன் இறுதியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட உள்ளது..

டிஜிபி துவக்கி வைத்தார்: நேற்றைய தினம், போட்டியின் துவக்க நாளில் ரைபில் பிரிவில் 100 யார்ட்ஸ் முதல் 350 யார்ட்ஸ் வரை போட்டிகள் நடைபெற்றன.. இதனை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு துப்பாக்கியால் சுட்டு போட்டியை துவக்கி வைத்திருந்தர்.. அவருடன், ஏடிஜிபி ஜெயராம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சாய் பிரணீத் மற்றும் காவல் அதிகாரிகள் காவலர்கள் கலந்துக்கொண்டனர்.

போட்டியை துவங்கி வைத்தபிறகு செய்தியாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி தந்திருந்தார். அப்போது, மாநில அளவிலான காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துக்கொள்வார்கள் என்று தெரிவித்தார்..

அதிக ஆர்வம்: மேலும், கடந்த ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் தமிழக காவல்துறை வீரர்கள் மத்திய படை சார்ந்த பி எஸ் எஃப், சி ஆர் எஃப் ஆகிய படைகளை வென்றதாகவும், அஸ்ஸாம் ரைபில் பிரிவில் தோல்வி அடைந்ததை இந்த ஆண்டு அந்த அணியை வெற்றி பெறுவார்கள் என்றும் டிஜிபி நம்பிக்கை தெரிவித்தார். இன்றைய தினம் போட்டியாளர்கள் யார் என்பதை அறிய காவல்துறையே ஆர்வம் கொண்டுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பு கூடிவருகிறது.. இந்த 2 நாள் துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+