அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த.. பவன்குமார் ரெட்டி ரௌடித்தனம்! தாம்பரம் தடியடிக்கு வன்னியரசு கண்டனம்
சென்னை: தாம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தடியடி தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி நிர்வாகத்தின் 73 சென்ட் நிலத்தை மாநகராட்சி ஆணையர் கையகப்படுத்தும் மக்கள் விரோத செயலை கண்டித்து, நேற்று மாலை 5 மணிக்கு தாம்பரம் பாரதி திடலில் போராட்டம் நடைப்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் - மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைத்திருந்த இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். அமைதியாக நடக்க வேண்டிய போராட்டத்தை வன்முறையாக மாற்றியுள்ளது தாம்பரம் காவல்துறை.

குறிப்பாக தாம்பரம் உதவி ஆணையர் பவன்குமார் ரெட்டி ஒரு ரௌடியை போல நடந்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி தரவில்லையென்றாலும், அரை மணி நேரம் போராட்ட நோக்கம் குறித்து மட்டும் பேசி விட்டு கலைகிறோம்.அல்லது கைது செய்யுங்கள் என்று சொல்லி விட்டு பேச ஆரம்பித்தோம். ஆனால், திரு.பவன்குமார் ரெட்டி போராட்டத்துக்கு வந்த தோழர்களை அவரே கழுத்தை பிடித்து இழுத்து அடிக்கிறார்.
அவரைத் தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். சனநாயக ரீதியாக நடக்க வேண்டிய போராட்டத்தை வன்முறைக்காடாக மாற்றிய பெருமை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி அவர்களையே சாரும். இந்த மாதிரி ரௌடித்தனத்தை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறோம்." என்று தெரிவித்து இருந்தார்.

இப்போது, விடுதலைச் சிறுத்தைகளும் மனித நேயமக்கள் கட்சியை சார்ந்த தோழர்களும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு உள்ளோம். தமிழ்நாடு அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க சதி செய்யும் இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
மற்றொரு எக்ஸ் பதிவில், "தாம்பரத்தில் காவல்துறை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையிலான போலீசாரின் ரௌடித்தனத்தை பாருங்கள். இன்று விடுதலைச் சிறுத்தைகளும் மனித நேய மக்கள் கட்சியினரும் இணைந்து நடத்திய போராட்டம் எதற்காக? தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி நிலத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போரட்டம். அனுமதி இல்லை. ஆனாலும் தடையை மீறி நடத்தினோம். அவ்வளவுதான். இது ஒரு குற்றமா? இதோ DC பவன்குமார் ரெட்டியின் ரவுடித்தனத்தை பாருங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார். -
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications