அதிமுக கூட்டணியில் சிக்கல்? வன்னியர் இடஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ்
சென்னை: வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தமிழகத்தின் 38 மாவட்ட தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இட பங்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெற உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். , பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டிய உள் இடப்பங்கீட்டை வழங்க தயங்குவதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
அதிமுக பாமக கூட்டணியை உறுதியாக்குமா அல்லது அதிமுகவில் இருந்து பாமக பிரிந்து தனித்து செயல்படுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போர்க்கொடி உயர்த்தி வருகிறார்.
இதற்கு எடப்பாடியார் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை. அமைச்சர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. தனது கொள்கையில் ராமதாஸ் பிடிவாதமாக உள்ளார்.

மௌனம்
ஆனால் எடப்பாடியாரோ, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கினால் ஒவ்வொரு சமுதாயம் சார்பாகவும் தனித்தனியாக கோரிக்கை எழும் என்பதால் மௌனம் காப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் அப்படி ஒவ்வொரு சமுதயாக வாரியாக இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் சிக்கலை உருவாக்கும் என்பதால் ராமதாஸின் கோரிக்கை எடப்பாடியார் இதுவரை ஏற்கவில்லை.

பாமக
இதனால் அதிமுகவுடன் பாமக கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் ராமதாஸ் மிக தீவிரமாக இடஒதுக்கீடுக்கான போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

ராமதாஸ்
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட பங்கீடு வழங்க வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாமகவும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் அடுத்தக் கட்டத்தை அடைந்திருக்கின்றன.

பாமக போராட்டம்
அதன்படி, வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தமிழகத்தின் 38 மாவட்ட தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இட பங்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்படவுள்ளது. பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டிய உள் இடப்பங்கீட்டை வழங்க தயங்குகிறது. தமிழக அரசின் இந்த தயக்கம் எவ்வகையிலும் நியாயமற்றது.இவ்வளவுக்கு பிறகும் கூட நமக்கான சமூக நீதியை வழங்க தமிழக அரசு மறுப்பது எந்த வகையில் நியாயம். யாருக்கோ அஞ்சி, நமக்கான இட பங்கீட்டை வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications