கன்னியாகுமரி மக்களவை தொகுதி: பட்டையை கிளப்பும் விஜய்வசந்த்.. பொன்னாரை விட முன்னிலை!
சென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக செயல்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் அந்த மக்களவை தொகுதி காலியாக உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் களம் இறங்கினார். அவரை எதிர்த்து வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் களம் கண்டார். இதற்கிடையே கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்தது.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், விஜய் வசந்த்துக்கும் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தொகுதியில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும், அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரை விஜய் வசந்த் முன்னிலை பெற்று வருகிறார். பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார். விஜய் வசந்த் இதுவரை 20, 946 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.












Click it and Unblock the Notifications