VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?
சென்னை: திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்றும் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் விசிகவுக்கு ஒரு சீட் கேட்டு பெற வேண்டும் என அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
23.03.2026 அன்று சென்னை, கோயம்பேடு தனியார் விடுதி ஒன்றில் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்
1. ஏப்ரல் 23' 2026 அன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' , வலதுசாரி பிற்போக்கு சக்திகளையும் அவர்களுக்கு மறைமுகமாகத் துணைநிற்கும் திரிபுவாத சக்திகளையும் வீழ்த்தி,
200 இடங்களுக்கும் மேலாக மகத்தான வெற்றியைப் பெற வேண்டும். அதற்கேற்ப தமிழகம் தழுவிய அளவில் கூட்டணி கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்களோடு இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த பொறுப்புணர்வோடும் தீவிர முனைப்போடும் களப்பணி ஆற்றுவோம் என இந்த உயர்நிலைக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது.
2. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கட்டமைப்பில் மேள்கொள்ளப்பட்டுவரும் 'மறுசீரமைப்பு நடவடிக்கை' அரசியல் களத்தில் ஒரு புதிய முயற்சியாகும். வருவாய் மாவட்ட எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவது வழக்கமான நடைமுறையாகும். ஆனால், அதனின்று மாறுபட்டு, தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுகளின் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு மாவட்டம் மற்றும் மாநில அளவிலான நிர்வாக முறையை அறிமுகப்படுத்திக் கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைத்து, 234 சட்டமன்றத் தொகுதிகளையும் 'தொகுதி மாவட்டங்களாக' அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியலரங்கில் முதல் முறையாக விசிக முன்னெடுத்துள்ள அரிய முயற்சியாகும்.
அத்துடன், 'அதிகாரப் பரவலாக்கம் ' என்னும் சனநாயக நடைமுறையைப் பின்பற்றி அனைத்து தொகுதி மாவட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் மாநகரம் ஆகியவற்றிலும் உள்ளாட்சி நிர்வாக எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பையும் மாற்றியமைத்து, அதிகாரப் பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஊரகப் பகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பல்லாயிரக் கணக்கான தோழர்கள் கட்சி அதிகாரத்தைக் கையாளும் தலைவர்களாகப் பரிணாமம் அடைந்துள்ளனர். குறிப்பாக, மகளிர், இளையோர் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கு கட்சி அதிகாரத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டில் பங்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது அதிகாரப் பொறுப்புகளைச் சனநாயகப்படுத்துவதில் முன்னுதாரணம் இல்லாத ஒரு மகத்தான சாதனையாகும்.
தொலைநோக்குப் பார்வையுடன் இத்தகைய சனநாயக நடவடிக்கைகளை நமது கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி உள்ளார். இதனமூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க கூடிய ஆற்றல் வாய்ந்த கட்சியாகவும் விசிக வலுப்பெற்றுள்ளது. கட்சியின் கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சனநாயகப்படுத்திக் கட்சியை அமைப்புரீதியாக வலிமைப்படுத்தியுள்ள தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களுக்கு இந்த உயர்நிலைக்குழு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
3. அமெரிக்காவும் , இஸ்ரேலும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது நடத்திவரும் அநீதியானப் போரை இந்த உயர்நிலைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சர்வதேச சட்டங்களுக்கு மாறாக குழந்தைகள் படிக்கும் பள்ளியின்மீது குண்டுவீசி சுமார் குழந்தைகள் உட்பட 168 பேரை அமெரிக்கா படுகொலை செய்துள்ளது. இது போர்க்குற்றமாகும். இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பே காரணம். எனவே, சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமெரிக்க அதிபரைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது.
4. ஈரான் மீது நடந்துவரும் போரின் காரணமாக உலகம் முழுவதும் எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அது மட்டுமின்றி மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கு 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா முழுமூச்சாகப் பாடுபட வேண்டும் என்று இந்த உயர்நிலைக் குழு இந்திய ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
5. ஈரான் அரசு ஹோர்முஸ் நீரிணையை மூடி வைத்துள்ளது. எண்ணெய் எரிவாயு தேவைகளுக்குப் பெரும்பாலும் வளைகுடா நாடுகளையே நம்பி இருக்கும் இந்தியாவில் இதனால் மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, இந்திய ஒன்றிய அரசு தனது அமெரிக்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டைத் திருத்திக்கொண்டு பாஜக ஆட்சிக்கு முன்பு வரை இந்திய ஒன்றிய அரசு கடைப்பிடித்து வந்த நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை இந்த உயர்நிலைக் குழு வலியுறுத்துகிறது.
6. ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் எண்ணெய், எரிவாயு விலையை ஒன்றிய அரசு உயர்த்தப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவ்வாறு செய்து 'ஏழை எளிய மக்கள் மீது நிதிச் சுமையை ஒன்றிய பாஜக அரசு அதிகரிக்கச் செய்யக்கூடாது' என இந்த உயர்நிலைக் குழு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
7. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதைக் காரணம் காட்டி தேர்தல் பறக்கும் படையினர் சிறு வணிகர்கள் தமது அன்றாடக் கொள்முதலுக்காக எடுத்துச் செல்லும் சிறு சிறு தொகைகளைக்கூட பறிமுதல் செய்வது அவர்களது வாழ்வாதாரத்தையே சிதைப்பதாக உள்ளது. பிற மாநிலங்களில் இந்த அளவுக்கு நெருக்கடி இல்லை. தமிழ்நாட்டில் இப்படி தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகச் செயல்படுவதை நிறுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கை தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உரிய அறிவுறுத்தலை வழங்குமாறு மாநிலத் தேர்தல் அதிகாரியை ( CEO) இந்த உயர்நிலைக் குழு கேட்டுக் கொள்கிறது.
8. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று 2019 ஆம் ஆண்டு முதல் இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்களிப்புச் செய்துள்ளது. எனவே, கட்சியின் வலிமைக்கேற்ப எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 'இரட்டை இலக்கத்தில்' தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டுமென்றும், 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைக்கான தேர்தலில் விசிக'வுக்கு ஒரு இடத்தைக் கேட்டுப் பெற வேண்டுமென்றும், தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களை இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது.
வணக்கம்!
இந்தச் செய்தியைத் தங்களது மேலான ஊடகத்தில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
-
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications