அதிமுக பாஜக இடையே இணைப்பு இருக்கிறது.. ஆனால் பிணைப்பு இல்லை - திருமாவளவன்
சென்னை: தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தனித்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளது விவாதத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், எடப்பாடி கூறியுள்ளது பாஜவுக்கான பதில் தான் என்றும், அதிமுக பாஜக இடையே இணைப்பு இருக்கிறது. ஆனால் பிணைப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போதிருந்தே தமிழ்நாடு அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களில் தீவிரமாகி வருகின்றன. ஆளும் திமுகவை எதிர்க்க அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. அவர்களுடன் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த காலங்களில் அதிமுக - பாஜக கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அது இப்போதும் தொடர்கிறது. கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அதிமுக - பாஜக இடையே தொடந்து விவாதம் நிலவி வருகிறது. சமூகவலைதளங்களிலும் அதிமுக - பாஜக இடையே வார்த்தை போர் ஏற்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் தொடர்ந்து விவாதம் ஏற்படுமளவுக்கு பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தேர்தலில் அதிக அளவிலான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக அதிமுக ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காகவே, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே கூட்டணி வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தனித்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளது விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், " அமித்ஷா மட்டும்தான் திரும்ப திரும்ப கூட்டணி ஆட்சி என்று கூறி வருகிறார். இதுவரை எடப்பாடி பழனிசாமி எந்தக் கருத்தையும் சொல்லாமல் மெளனம் காத்து வருகிறார் என்று கூறியிருந்தேன். தற்போது எடப்பாடி அதற்கு விடை கொடுத்துள்ளார்.
அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது பாஜகவிற்கான பதில் தான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை.
அதிமுக அதற்கு உடன்படாது என்ற கருத்தையே பாஜகவினருக்கு எடப்பாடி சொல்லியிருக்கிறார். அதிமுக பாஜக இடையே இணைப்பு இருக்கிறது. ஆனால், பிணைப்பு இல்லை என்றார். மேலும், கஸ்டடி டெத் என்பது நிகழக் கூடாது. அதை அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்கிறபோது, சுட்டியும் காட்டுகிறோம். ஆனால் இது தொடர்கதையாக நீடிப்பது கவலை அளிக்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications