போன்ல மிரட்டுறாங்க... உயிருக்கு பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது.
திருமாவளவன் கடலூர் மாவட்டம் சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் உயர்நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
பிஞ்சுல பழுத்ததை நானும் சொல்லட்டுமா.. என்கிட்ட இந்த விளையாட்டெல்லாம் கூடாது.. இளங்கோவன் எச்சரிக்கை
அதில், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தமக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும் தொலைப்பேசி மூலம் தம்மை அடிக்கடி சிலர் மிரட்டுவதாகவும் தனது மனுவில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். திருமாவளவன் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் முன்பு ஏப்ரல் 1-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருமாவளவன் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருப்பது அவரது கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.