போன்ல மிரட்டுறாங்க... உயிருக்கு பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது.

VCK Leader Thirumavalavan seek Police protection, Pettion filled in HC

திருமாவளவன் கடலூர் மாவட்டம் சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் உயர்நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தமக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும் தொலைப்பேசி மூலம் தம்மை அடிக்கடி சிலர் மிரட்டுவதாகவும் தனது மனுவில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். திருமாவளவன் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் முன்பு ஏப்ரல் 1-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருமாவளவன் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருப்பது அவரது கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+