கொளுத்தி போட்ட ஆதவ் அர்ஜுனா! பஞ்சாயத்துகளுக்கு நடுவே முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்!
சென்னை: சமீபத்தில் விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக விஜய் உடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்த ஆதவ், தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியிருந்தார். இந்த கருத்துகள் அரசியல் தளத்தில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு எதிர்க்கட்சிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை காட்டிலும், கூட்டணி கட்சிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்தான் சமீப காலமாக அதிகமாக இருக்கின்றன. அதிலும் விசிகவால் கிளம்பிய பஞ்சாயத்துகள் கொஞ்சம் நஞ்சமல்ல. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டபோது விசிகவின் நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, குண்டு ஒன்றை வீசியெறிந்தார். சினிமாவில் நடித்தவர்கள் எல்லாம் துணை முதல்வர் ஆகும் போது தீவிர அரசியலுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர் திருமாவளவன் துணை முதல்வராக ஆகக்கூடாதா? ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று பேசியிருந்தார்.

இவர் பேசியது பிரச்னைக்கு காரணம் என்றாலும் கூட, திருமாவளவன் இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காமல் கடந்து சென்றது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதை போல ஆகிவிட்டது. போதாத குறைக்கு, “ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை விசிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது” என்றும் திருமா, ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு பயங்கரமாக சப்போர்ட் கொடுத்திருந்தார். இவை எல்லாம் உடன் பிறப்புகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தின.
வழக்கமாக சில அரசியல் பிரச்னைகள், அன்றாட அரசியல் நிகழ்வுகளில் லைம்லைட்டில் இருந்து காணாமல் போய்விடும். ஆனால், ஆதவ் அர்ஜுனா பஞ்சாயத்து அப்படி ஆகவில்லை. இந்நிலையில், விஜய் உடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசியிருந்த ஆதவ், தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்று வெடியை கொளுத்தி போட்டிருந்தார். ஆனால் உருண்டது என்னவோ திருமாவின் தலைதான்.
ஆதவ் பேசியது தவறுதான். அது அவரது தனிப்பட்ட கருத்து.. கட்சியின் கருத்து அல்ல என்று திருமா விளக்கம் கொடுத்தார். ஆனால் ஆதவ் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது அவரின் கருத்தை விசிக ஏற்றுக்கொள்வதை போல இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சலசலப்புகளுக்கு இடையேதான் இன்று முதல்வர் ஸ்டாலினை, திருமாவளவன் நேரில் சந்தித்துள்ளார். மதியம் 1 மணியளவில் நடந்த இந்த சந்திப்பில் விசிக சார்பில் புயல் வெள்ள நிவாரண நிதியை திருமாவளவன் முதல்வரிடம் வழங்கியுள்ளார். விசிக சார்பில் எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளமும், எம்பிக்களின் 2 மாத சம்பளமும் வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்!












Click it and Unblock the Notifications