சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ரெய்டு.. "ஜனநாயகத்தை நசுக்குகிறார்கள்".. சீறும் விசிக திருமாவளவன்!

Google Oneindia Tamil News

சென்னை: எஸ்டிபிஐ - பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறை அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும்
எதிரான நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நேற்று முதல்நாள் நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டது. ஃபிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை புரசைவாக்கத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்பினர் சாலை மறியல் செய்தனர்.

என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த கடலூர், தேனி, கோவை மாவட்ட தலைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக நாடு முழுக்க 100க்கும் மேற்பட்டோர் இன்றைய ரெய்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதை எதிர்த்து நேற்று கேரளாவில் பெரிய அளவில் பந்தும் நடைபெற்றது,

கட்சிக்கு ஆள் சேர்க்கிறோம்.. “ரெய்டு” காரணமாக இரட்டிப்பு! மத்திய அரசின் ஒத்தாசைக்கு நன்றி - எஸ்டிபிஐகட்சிக்கு ஆள் சேர்க்கிறோம்.. “ரெய்டு” காரணமாக இரட்டிப்பு! மத்திய அரசின் ஒத்தாசைக்கு நன்றி - எஸ்டிபிஐ

விசிக

விசிக

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் ரெய்டுக்கு எதிராக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சோதனை என்னும் பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுடைய இல்லங்கள், அலுவலகங்களில் நுழைந்து அவர்களைத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் சனாதன பாஜக அரசு ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

விரோத போக்கு

விரோத போக்கு

இத்தகைய இஸ்லாமிய விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சனநாயகவழியில் வெளிப்படையாக இயங்கும் ஒரு வெகுமக்கள் இயக்கம் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகள் ஆகும். இவ்வியக்கங்களின் தலைமை பொறுப்பில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இடம் பெற்றிருந்தாலும் இந்துக்கள் உள்ளிட்ட பிற மதங்களைச் சார்ந்தவர்களும் தலைமைத்துவப் பொறுப்புகளை வகிக்கின்றனர். அதேபோல, இவ்வியக்கங்கள் இஸ்லாமியர்கள் நலன்கள் மட்டுமின்றி அனைத்துத்தரப்பு மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுகிற மையநீரோட்ட அமைப்புகளே ஆகும்.

 பாஜக பொறுப்பு

பாஜக பொறுப்பு

ஆனால், தொடர்ந்து பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இவ்விரு இயக்கங்களையும் குறிவைத்து, பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதாக முத்திரை குத்தி வெகுமக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அகில இந்திய அளவில் கட்டுக்கோப்புடனும் கருத்தியல் வலுவுடனும் அனைத்துத் தரப்பு மக்களையும் அணிதிரட்டி வருவதால், இவ்வியக்கங்கள் ஒரு மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்து விடக் கூடாதென்னும் உள்நோக்கத்தில்தான் பாஜக அரசு, இவ்வாறு இவ்வியக்கங்களை நசுக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

பரிசோதனை

பரிசோதனை

அண்மையில் நடந்த பரிசோதனைகளில் நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளுக்கும் எதிரானவையாகும். எனவே, இவ்வாறான சிறுபான்மையின வெறுப்பு அரசியலைச் சனாதன சங்பரிவார் அரசு கைவிட வேண்டுமென விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்., என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இவர்கள் மீதான நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
VCK MP Thirumavalavan condemns the NIA raid against the Popular Front of India organization.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X