பகவத் கீதையை விஜய் பெற்றது முரண்பாடாக உள்ளது.. விசிக வன்னியரசு கருத்து
சென்னை: பிரபல நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் ஜாதி ஏற்றத்தாழ்வை தவெக கட்சி எதிர்க்கும் என்று தெரிவித்தார். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு இது குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், வருணாசிரமக்கோட்பாட்டை எதிர்ப்பதாக கொள்கை அறிவித்த திரு.விஜய் அவர்கள், பகவத்கீதையை பெற்றுக்கொண்டது முரண்பாடாகும். ஏனென்றால், நான்கு வருணங்களை நானே படைத்தேன் என்பது தான் கீதையின் சாரம். அப்புறம் எப்படி வருணத்தை எதிர்க்க முடியும்?, இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரது நிலைப்பாட்டை ஆதரித்து வரும் நிலையில், வன்னி அரசின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பகவத் கீதை, திருக்குர்ஆன், பைபிள் போன்ற மும்மதங்களின் புனித நூல்களை விஜய் அந்த மாநாட்டில் வாங்கி தான், மதசார்பு இல்லாதவர் ஆனால், மத நம்பிக்கை உள்ளவர் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். எனவே இதை விமர்சிப்பது தவறு என்பது விஜய் ரசிகர்கள் வாதமாக உள்ளது.
அதேநேரம், ஒவ்வொரு பிற கட்சியினரும் விஜய் மாநாட்டில் பேசிய பேச்சை டீகோட் செய்து குறைகளையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள். வன்னி அரசு வருணாசிரமம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications