2019ல் நான் திமுக உறுப்பினர்.. வெற்றிக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் விசிக ரவிகுமார் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தான் திமுக எம்.பி. தான் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.

2019 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் வெற்றிபெற்று திமுக இமாலய சாதனை படைத்தது. தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக சார்பாக போட்டியிட்ட ஓ.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றார். திமுக கூட்டணி வெற்றிபெற 38 தொகுதிகளில் திமுக மற்றும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 24 பேர் பாராளுமன்றத்திற்கு தேர்வானார்கள். கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டது.

VCK Ravikumar replies to the plea against his victory under rising sun symbol in MHC

இது போக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 2 உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இரண்டு உறுப்பினர்கள், விசிகவில் இருந்து டாக்டர் திருமாவளவன் ஆகியோர் தங்களின் கட்சி சின்னம் அல்லது தனி சின்னத்தில் இருந்து போட்டியிட்டு வென்றனர்.

இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சி சின்னராஜ் ஆகியோர் திமுக'வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதேபோல் விசிக கட்சியின் உறுப்பினரான ரவிக்குமார் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த நிலையில் இன்னொரு கட்சியின் சின்னத்தில் இவர் வெற்றிபெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி, தலைவர் எம். எல். ரவி வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் சென்னை உயர் நீதிமன்றம் ரவிகுமாரிடம் பதில் அளிக்கும்படி குறிப்பிட்டு இருந்ததில். இந்த நிலையில் இந்த வழக்கில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது தான் ஒரு திமுக உறுப்பினர். மனுதாக்கல் செய்த போது நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த உறுப்பினர் அல்ல என தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியுமே தவிர பொது நல வழக்கு தொடர முடியாது என்பதால் தனக்கெதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வழக்காக இல்லாத காரணத்தால் இந்த வழக்கை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும். என்னுடைய வேட்பு மனுவில் நான் தெளிவாக திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளேன் என்று ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, தேர்தலுக்கு முன்னதாகவே தான் மதிமுக'வில் இருந்து விலகி திமுக'வில் சேர்ந்து விட்டதாக பதில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+