திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. ஆனால் அதிக கட்சிகள் இருப்பதே தொகுதி பங்கீட்டில் சிக்கலை உருவாக்கியது. சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு கடந்த முறையை விட குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விசிக 10 தொகுதிகள் கேட்ட நிலையில், 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமாவளவன் மனம் திறந்து பேசியுள்ளார்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தமுறை அவர்களும் அதைவிட 7-8 தொகுதிகளில் குறைவாக போட்டியிடுகிறார்கள். திமுகவே தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளதால், நாங்களும் விட்டுக் கொடுக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும். (VCK Thirumavalavan)

எடப்பாடி சொல்வதை ஏற்க முடியாது
தொகுதி பங்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு தான் பதில் சொல்ல வேண்டும். அதைவிடுத்து திமுக கூட்டணி கட்சிகளை அவர் இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. திமுக அதிமுகவை இழிவாக பேசுவதாக அவர் நினைக்கிறார். அப்படியென்றால் அவர் திமுக மீதுதான் விமர்சனம் வைக்க வேண்டும். ஆனால் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சிக்க கூடாது.
அதிமுக கூட்டணியில் வலுவாக உள்ள கட்சிகள் ஒன்றிரண்டு கட்சிகள் தான். அங்கு அதிமுக, பாஜகவை தவிர வேறு எந்தக் கட்சியும் வலிமையாக இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் ஏற்கனவே 18 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்போது புதிதாக பல கட்சிகள் இணைந்துள்ளன. நிறைய கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
போதும் என்கிற மனமே
இதன் காரணமாக தான் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைந்து இரண்டொரு நாட்களில் உடன்பாடு எட்டப்படும். திமுக கூட்டணியில் நாங்கள் 8 தொகுதிகளில் 2 பொது தொகுதிகள் கேட்டோம். அதை திமுகவில் ஒதுக்கிவிட்டனர். போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து" என்றார்.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான்












Click it and Unblock the Notifications