Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளச்சேரி டூ மேடவாக்கம்.. ஆஹா, பள்ளிக்கரணையில் பார்த்தீங்களா? சள்ளுனு பறந்து வந்துடுச்சாம்..அற்புதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகளின் சீசன் துவங்கி உள்ள நிலையில், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வமாகி உள்ளனர்..!!

தற்போது தமிழகமெங்கும் மழை பெய்து வருகிறது.. அந்தவகையில், சென்னைக்கும் நல்ல மழை அவ்வப்போது கிடைத்து வருகின்றன.. நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகின்றன.. குறிப்பாக, பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில், நீர்வளம் பெருகி உள்ளது..

Velachery Medavakkam: Chennai Pallikaranai wetland visit rare type of birds and What are the 72 Birds

நீர்நிலைகள்: வழக்கமாக, இதுபோன்ற அக்டோபர் மாதங்களில், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு, வெளிநாட்டு பறவைகள் வருகை தருவது வழக்கமாகும்.

அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இந்த பறவைகள் வந்து செல்லும்.. இப்போதைக்கு சாம்பல்தலை, மஞ்சள் வால்பறவை, கர்கேனி, நீலசிறகு வாத்து, தட்டைவாயன் போன்ற அரிய வகை பறவைகள் வரத்தொடங்கி உள்ளனவாம்.. அதாவது, மஞ்சள் வாலாட்டி - 60, நீலசிறகு வாத்து - 50, தட்டைவாயன் - 1, சாம்பல்தலை ஆள்காட்டி- 2 என பறவைகளின் வருகை உள்ளது.

ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவை கடந்து, பறவைகள் அதிகமாகவே, இனிவரும் நாட்களில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, வடகிழக்கு பருவ மழைப்பொழிவு அதிகமாகும்போது, இந்த பறவைகளின் எண்ணிக்கையும் உயரும் என்கிறார்கள்.

மகிழ்ச்சி : எனினும், மெட்ரோ ரயில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், பறவைகளின் வருகை வழக்கமான அளவில் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கட்டுமான பணிகளால் சதுப்பு நிலத்தின் சூழலியலுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Velachery Medavakkam: Chennai Pallikaranai wetland visit rare type of birds and What are the 72 Birds

பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பரவியிருக்கிறது.. இங்கு, கடந்த 2022 அக்டோபர் நிலவரப்படி, 190 வகை பறவைகள் வந்து சென்றுள்ளன.. இதில், 72 வகை பறவைகள் வெளி நாடுகளில் இருந்து வந்து செல்கின்றன. அதிகபட்சமாக வருடத்துக்கு மொத்தம் 41,000 பறவைகள் வந்து செல்வது உறுதியாகியிருக்கிறதாம்.

கணக்கெடுப்பு: வழக்கமாக, தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது, வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகே நடைபெறும். அதன்படி 2022-2023ம் வருடத்திற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நிலப் பறவைகள் என 2 கட்டங்களாக நடைபெற்றன.. ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும், நிலப் பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் 4 மற்றும் 5 தேதிகளிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+