ஆம்பூருக்கு மெகா பரிசு.. நிர்மலா ஹிட் அறிவிப்பால் வேலூர் மாவட்டமே மாறுது.. இதுவே பாஜக வர்த்தக அரசியல்
சென்னை: 2026-27 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ள பல்வேறு அறிவிப்புகள் நாட்டு மக்களின் கவனத்தை பெற்று வருகின்றன.. அந்தவகையில் ஒடிசா மாநிலம் தால்சரில் இருந்து வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு நீர்வழிப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.. ஒடிசாவுக்கும் ஆம்பூருக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக நம்ம ஆம்பூரை இதில் இணைக்க வேண்டும்? அதற்கான சாத்திய கூறுகள் என்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்...!
ஒடிசாவின் தால்சரில் இருந்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் வரையிலான புதிய நீர்வழிப்பாதை திட்டம் இன்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது..

இதனை வெறும் போக்குவரத்து வசதியாக மட்டுமே பார்க்க முடியாது.. இந்தியாவின் கிழக்கு பகுதியை தெற்கோடு இணைக்கும் ஒரு பிரம்மாண்ட அரசியல் இதில் மறைந்துள்ளது.. மிகச்சிறந்த பொருளாதார உத்தியாகவும் கவனிக்கப்படுகிறது..
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
காரணம், வட மாநில கனிம வளங்களையும் தென் மாநில உற்பத்தி திறனையும் ஒரு நேர்க்கோட்டில் இணைப்பதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த மத்திய அரசு திட்டமிடுவது தெரியவருகிறது..
வரலாற்று ரீதியாக கவனித்தோமானால், ஒடிசா போன்ற மாநிலங்கள் இயற்கை வளங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றை முறையாக பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன...
வேலூர் மாவட்டம்
தால்சர் பகுதி இந்தியாவின் நிலக்கரி மற்றும் தாதுக்களின் இதயமாக விளங்கி கொண்டிருக்கிறது.. அங்கிருந்து சரக்குகளை சாலை வழியாகவோ அல்லது ரயில் வழியாகவோ கொண்டு வருவது என்பது லேசுபட்ட வேலையில்லை.. நிறைய காசு தேவைப்படும்.. நிறைய டைம் எடுக்கும்..
ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நீர்வழிப்பாதை, இந்தியாவின் கிழக்கு கடற்கரை வழித்தடத்தினால் சரக்கு போக்குவரத்து செலவு பல மடங்கு குறையும்.. நேரம் மிச்சமாகும்.. உலகளாவிய சந்தையில் இந்திய பொருட்களின் விலையை போட்டித்தன்மையுடன் வைத்திருக்க உதவும்.
என்ன காரணம் ஆம்பூர்?
எனினும் இதற்கு எதற்கு நம்முடைய ஆம்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது? என்றுதானே கேட்கிறீர்கள்.. அதிலும் ஒரு சீக்ரெட் உள்ளது..
ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வாணியம்பாடி, ராணிப்பேட்டை பகுதிகள் பல வருட காலமாகவே இந்தியாவின் தோல் மற்றும் காலணி ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.. ஆம்பூரில் இருந்துதான் லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆம்பூர் பெஸ்ட் சாய்ஸ்
ஒரு நீர்வழிப்பாதை ஆம்பூர் வரை வரும்போது, அது இந்த பிராந்தியத்தை ஒரு மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து முனையமாக மாற்றும்.. இந்த நீர்வழிப்பாதை மூலம் மூலப்பொருட்களைக் கொண்டு வருவதற்கும், தயாரான பொருட்களை துறைமுகங்களுக்கு அனுப்பி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதால்தான் நம்முடைய ஆம்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது..
மேலும், இந்த திட்டமானது உள்ளூர் இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், தமிழகத்தின் உள்மாவட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
திராவிட பொருளாதார மாடல்
இதையே அரசியல் ரீதியாக சற்று உற்று கவனித்தால், மத்திய அரசு தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளில் அதிக கவனம் செலுத்துவதை இது காட்டுகிறது...
திராவிட பொருளாதார மாடல் மற்றும் மத்திய அரசின் ஜி-7 பொருளாதார இலக்கு ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு பாலமாக இந்த திட்டம் அமையும்.
தமிழக அரசு முன்னெடுக்கும் தொழில் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த நீர்வழிப்பாதை ஒரு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றே தெரிகிறது.. அதுமட்டுமல்ல, நீர்நிலைகளை பற்றியும் பயப்பட தேவையில்லை. காரணம், இது ஒரு பசுமை போக்குவரத்து முறை என்பதால் நீண்ட கால அடிப்படையில் நன்மை பயக்கும் என்றே கருதப்படுகிறது.
பாஜக வர்த்தக அரசியல்
இதன் மூலம் ஒடிசாவின் சுரங்கங்களும் ஆம்பூரின் தொழிற்சாலைகளும் சேர்ந்து, நம்முடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது..
மொத்தத்தில் தால்சர் - ஆம்பூர் நீர்வழிப்பாதை என்பது வெறும் சிமெண்ட் மற்றும் தண்ணீருக்கான பாதையாக மட்டுமல்லால், அது வடக்கையும் தெற்கையும் வர்த்தக ரீதியாக ஒன்றிணைக்கும், பாஜகவின் புதிய வர்த்தக அரசியலாக பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை!












Click it and Unblock the Notifications