வேலூர் தேர்தலை ரத்து செய்திருக்க கூடாது.. முதலமைச்சர் பழனிசாமி கருத்து
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம்... தேர்தலை ரத்து செய்திருக்க கூடாது.. முதல்வர் பழனிசாமி கருத்து
Recommended Video
சென்னை: வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்க கூடாது என்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 38 தொகுதிகளுக்கு மட்டுமே, வியாழக் கிழமை தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் ரத்து குறித்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த விதத்தில், தேர்தல் ஆணையம் முழுமையாக ஆராய்ந்தே வேலூரில் தேர்தலை ரத்து செய்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர்களுக்கு பணம்கொடுத்து பழக்கப்படுத்தியது திமுக தான் என்றும் அதிலும் தோல்வி அடைந்து இருப்பதாக விமர்சனம் செய்தார்.
பணம் கொடுத்து ஜனநாயகத்தை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள் என்று திமுகவை சீண்டிய அமைச்சர் ஜெயக்குமார், ஜனநாயகத்தில் அதிகநம்பிக்கை கொண்டுள்ளது அதிமுக என்றார். வேலூர் தொகுதி தேர்தல் ரத்து, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் மகிழ்ச்சி தெரிவித்தார். பணப்பட்டுவாடா புகாரில் தொடர்புடைய வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இந்தநிலையில், வேலூர் தேர்தல் ரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள, முதலமைச்சர் பழனிசாமி, வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்க கூடாது என்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார். இருப்பினும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தும், முதலமைச்சர் பழனிசாமியின் கருத்தும் மாறுப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications