மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலை மாற வேண்டும்! வாணியம்பாடி துயர நிகழ்வால் வேல்முருகன் வேதனை!
மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலை மாற வேண்டும் என வேல்முருகன் கூறுகிறார்.
சென்னை: மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலை மாற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தது வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

இலவசத்திற்கு கையேந்தும் நிலை
மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் இந்நிலையும் இலவசத்தின் பெயரால் தொடரும் மரணங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு, தனியார் நிறுவனம் சார்பில் நடந்த இலவச வேட்டி- சேலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

காவல்துறை கண்காணிப்பு
முன் அனுமதி பெற்று இந்த இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். மக்கள் வரிசையில் செல்ல தடுப்புகளும், உரிய பாதுகாப்பும் இருக்கிறதா என காவல்துறை கண்காணித்த பிறகே, இந்நிகழ்ச்சியை நடத்திருக்க வேண்டும்.

4 பெண்கள்
எனவே, எதிர் வரும் காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் எந்த நலத்திட்ட நிகழ்ச்சி என்றாலும், அதனை யார் நடத்தினாலும், அரசிடம் தெரியப்படுத்தி முறையான அனுமதி பெற வேண்டும்.வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.

ஆறுதலும் இரங்கலும்
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.உயிரிழந்த 4 பெண்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications