மாநில அரசுகளை 'டம்மியாக்க' சூழ்ச்சி... மத்திய அரசு மீது பாயும் வேல்முருகன்
சென்னை: நாட்டிலுள்ள அனைத்துப் பணிகளுக்குமே பொது நுழைவுத் தேர்வு என்பது மாநிலங்களை டம்மியாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்பதால் அதனை ஏற்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அரசமைப்புச் சட்டம்
மோடி அரசு வந்ததிலிருந்து அரசமைப்புச் சட்டத்துக்கே வேட்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மோடி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அதைத் தெளிவாக்குகிறது. அப்படி ஒரு நடவடிக்கைதான் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஒப்புதல் வழங்கிய "ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு" எனும் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கும் வங்கிப் பணிகளுக்கும் பொது நுழைத் தேர்வு ஆகும்.

மாநிலங்கள் பங்கு?
நாட்டிலுள்ள அனைத்துப் பணிகளுக்குமே பொது நுழைவுத் தேர்வு; அதை ஒன்றிய அரசே நடத்தும் என்பதில் மாநிலங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றாகிறது. அவ்வளவு ஏன், மாநிலங்களுக்கான அவசியமே இல்லை; எந்த வேலையுமில்லாத மாநிலங்களைப் பேசாமல் கலைத்துவிடலாம் என்பதுதான் இதிலிருந்து தெரியவரும் அல்லது இது சொல்லாமல் சொல்லும் செய்தி. இந்தச் செய்திக்கு வடிவம் கொடுக்க, நேரடியாக இல்லாமல் மறைமுகமாகச் செய்யும் முயற்சிதான் பொது நுழைவுத் தேர்வு என்பது.

வேல்முருகன் வேதனை
கல்வியைச் சந்தைமயமாக்குவதன் மூலம், அந்தச் சந்தையில் பொது நுழைவுத் தேர்வே விலையேறப் பெற்ற பொருளாகிவிடும்; அதனால் அதற்கு வகைதொகையற்ற பணத்தைக் கொட்டியழ வேண்டும். கல்வி அங்கே இரண்டாம் பட்சம், மூன்றாம் பட்சம் அல்ல; அர்த்தமற்ற பொருளாகவே ஆகிவிடும். என்றைக்கு "நீட்" வந்ததோ அன்றே இந்தக் கல்விச் சந்தையும் களைகட்டிவிட்டது.

தன்னாட்சி பெறுக
மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கும் வங்கிப் பணிகளுக்கும் இனி ஒன்றிய அரசின் பொது நுழைத் தேர்வாம்! பல்வேறு மொழி வழி தேசிய இன நாடுகளின் (மாநிலங்கள்) ஒன்றியத்தில் போய் ‘ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு' என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது! இதற்கு நிலையான தீர்வாக, மாநிலங்கள் தன்னாட்சி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications