சிமெண்ட் -செங்கல் -இரும்பு கம்பி விலை கிடுகிடு! கட்டுமான தொழில் கடும் பாதிப்பு! வேல்முருகன் வேதனை!
சென்னை: கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.410 இருந்து ரூ.450 ஆகவும், ஒரு செங்கல் விலை ரூ.9.50 லிருந்து ரூ.11.50 ஆகவும், உயர்ந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கடனால் அவதி
கொரோனா முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள், தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்கி தங்களின் வாழ்வாதாரத்தை ஓட்டினர். ஊரடங்கு திரும்ப பெறப்பட்டு ஒராண்டிற்கு மேலானாலும், தொழிலாளர்கள் பெரும்பாலோனோர், தாங்கள் வாங்கிய கடனை இன்னும் முழுமையாக திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

கட்டுமானப் பொருட்கள்
இச்சூழலில், கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொழிலாளர்கள் வேலை இழந்து மீண்டும் வீட்டிலேயே முடங்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்து மாதங்களாக இரும்பு கம்பிகளின் விலை 30 முதல் 42 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. அவற்றின் ஒரு டன் விலை ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

விலை கிடுகிடு
அதே போன்று, ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.410 இருந்து ரூ.450 ஆகவும், ஒரு செங்கல் விலை ரூ.9.50 லிருந்து ரூ.11.50 ஆகவும், உயர்ந்துள்ளது. எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, சென்னை, கோவை போன்ற பெரும் நகரங்களில், 2019-ல் , ரூ.25 லட்சத்துக்கு விற்கப்பட்ட வீடுகள், தற்போது ரூ.30 லிருந்து ரூ.35 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் மோதல் காரணமாக இரும்பு கம்பிகளின் விலை உயர்ந்துள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.

தொழில் முடங்கும்
இந்த கட்டுமான பொருட்களின் விலை உயர்வு கட்டுமானத்துறையை பெரிதும் பாதித்துள்ளது. விலை உயர்வு காரணமாக சிறு கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணியை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. அதுமட்டுமின்றி, கட்டுமான தொழிலை நம்பி தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். தொழில் முடங்கினால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

அரசுகளுக்கு கோரிக்கை
எனவே கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசு விரைந்து செயல்பட வேண்டும். இரும்பு கம்பிகள் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த, சிமெண்ட் உற்பத்தியை அதிகரித்து நியாயமான விலையில் அரசே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications