பிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்
சென்னை: பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் எப்போதுமே மக்களுக்கானதாக இருந்ததில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார்.
கொரோனாவுக்கு முன்பே 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும், ஆனால் பொருளாதார வீழ்ச்சியை கொரோனா மேல் பழிபோட்டு தப்ப பார்ப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கண்டனம்
கொரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதலபாதாளத்திற்கே தள்ளிய பிரதமர், இப்போது, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என்கிறார்!இது, நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பதாக, பழியை கொரோனா மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கும் வழியே வேறென்ன? - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

பொருளாதார மீட்பு
"கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்!" டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டுக் கூட்டத்தில், காணொலி வாயிலாக இப்படிப் பேசினார் மோடி. ‘வளர்ச்சியை மீண்டும் பெறுதல்' என்ற தலைப்பின் தொடக்கவுரையில் இவ்வாறு பேசிய அவர், "கொரோனா அச்சுறுத்தலுக்கிடையிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில்தான் செல்கிறது" என்றுவேறு மார்தட்டிக் கொண்டார்.

ஆத்திரம் வருகிறது
மோடியின் பேச்சு ஆறுதலுக்குப் பதிலாக ஆத்திரத்தையே ஏற்படுத்துகிறது. காரணம், பிரதமராக அவரது நடவடிக்கை எதுவுமே மக்களுக்கானதாக இருந்ததில்லை. கார்ப்பொரேட்டுகள், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே இருந்தது, இருக்கிறது. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பெருமுதலாளிகள் பலர் வெளிநாடுகளுக்குக் கம்பிநீட்டியது மோடி ஆட்சியில்தான். வாராக்கடன் பல நூறு லட்சம் கோடிகளை கார்ப்பொரேட்டுகள், பெருமுதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்ததும் மோடி அரசுதான்.

பொருளாதார வீழ்ச்சி
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் சிறு, குறு, உறு தொழில்களையெல்லாம் அழித்து வேலையின்மையையும் விலையுயர்வையும் பெருக்கி, பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கே தள்ளினார். அதனால்தான் கொரோனாவுக்கு முன்பே கடந்த 8 காலாண்டுகளாக படிப்படியாக சரிந்து 3.2 விழுக்காடாக ஆனது பொருளாதாரம். இதைப் பொருளாதார நிபுணர்களும் பன்னாட்டு நிதியமும் (International Monetary Fund - IMF) கூட உறுதி செய்தனர்.

குற்றச்சாட்டு
கொரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதலபாதாளத்திற்கே தள்ளிய பிரதமர், இப்போது, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என்கிறார்! இது, நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பதாக, பழியை கொரோனா மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கும் வழியே வேறென்ன?
இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications