பிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்
சென்னை: பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் எப்போதுமே மக்களுக்கானதாக இருந்ததில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார்.
கொரோனாவுக்கு முன்பே 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும், ஆனால் பொருளாதார வீழ்ச்சியை கொரோனா மேல் பழிபோட்டு தப்ப பார்ப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கண்டனம்
கொரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதலபாதாளத்திற்கே தள்ளிய பிரதமர், இப்போது, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என்கிறார்!இது, நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பதாக, பழியை கொரோனா மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கும் வழியே வேறென்ன? - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

பொருளாதார மீட்பு
"கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்!" டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டுக் கூட்டத்தில், காணொலி வாயிலாக இப்படிப் பேசினார் மோடி. ‘வளர்ச்சியை மீண்டும் பெறுதல்' என்ற தலைப்பின் தொடக்கவுரையில் இவ்வாறு பேசிய அவர், "கொரோனா அச்சுறுத்தலுக்கிடையிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில்தான் செல்கிறது" என்றுவேறு மார்தட்டிக் கொண்டார்.

ஆத்திரம் வருகிறது
மோடியின் பேச்சு ஆறுதலுக்குப் பதிலாக ஆத்திரத்தையே ஏற்படுத்துகிறது. காரணம், பிரதமராக அவரது நடவடிக்கை எதுவுமே மக்களுக்கானதாக இருந்ததில்லை. கார்ப்பொரேட்டுகள், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே இருந்தது, இருக்கிறது. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பெருமுதலாளிகள் பலர் வெளிநாடுகளுக்குக் கம்பிநீட்டியது மோடி ஆட்சியில்தான். வாராக்கடன் பல நூறு லட்சம் கோடிகளை கார்ப்பொரேட்டுகள், பெருமுதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்ததும் மோடி அரசுதான்.

பொருளாதார வீழ்ச்சி
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் சிறு, குறு, உறு தொழில்களையெல்லாம் அழித்து வேலையின்மையையும் விலையுயர்வையும் பெருக்கி, பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கே தள்ளினார். அதனால்தான் கொரோனாவுக்கு முன்பே கடந்த 8 காலாண்டுகளாக படிப்படியாக சரிந்து 3.2 விழுக்காடாக ஆனது பொருளாதாரம். இதைப் பொருளாதார நிபுணர்களும் பன்னாட்டு நிதியமும் (International Monetary Fund - IMF) கூட உறுதி செய்தனர்.

குற்றச்சாட்டு
கொரோனாவுக்கு முன்பே பொருளாதாரத்தை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதலபாதாளத்திற்கே தள்ளிய பிரதமர், இப்போது, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என்கிறார்! இது, நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பதாக, பழியை கொரோனா மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கும் வழியே வேறென்ன?
இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications