துணைவேந்தர்கள் நியமனம் எப்போது? சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் அப்டேட்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி விரைவில் துணைவேந்தர்களை நியமிப்போம் என தமிழக உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அமைச்சர் கோவி. செழியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் மாநில அரசால் நடத்தப்படும் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வேந்தர் என்ற இடத்தில் அரசு என மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பினார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. வழக்கின் முடிவில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இதன் காரணமாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் வந்தது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆண்டு மே மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சட்டத்திருத்தங்களின் செயல்பாட்டுக்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை பிப்ரவரி 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வில், 'இந்த வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டது ஏன்?' எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி தலைமை நீதிபதி அமர்வு அல்லது பொருத்தமான அமர்வில் பட்டியலிடப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்களின் வாதங்களைக் கேட்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், வழக்கை ஆறு வாரங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. முன்னதாக வழக்கை மேற்கோள் காட்டி பிப்ரவரி 2 ஆம் தேதியன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்தது சட்டவிரோதம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக பேசியுள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், "முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை விரைவில் நியமிப்போம். துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தேசியக் கொடி ஏற்றும் உரிமையை கலைஞர் எப்படி பெற்றுத் தந்தாரோ, அதேபோல் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை மாநில முதலமைச்சருக்கே உண்டு என்ற உரிமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொடுத்துள்ளார். சட்டரீதியாக போராட்டம் நடத்தி, அதற்கான தீர்ப்பையும் தமிழ்நாடு பெற்று, இந்தியாவிற்கே வழிகாட்டியுள்ளது. துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிக்கலாம் என்ற உத்தரவை பெற்றது மிகப்பெரிய பெருமை." எனத் தெரிவித்துள்ளார்.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications