'பானை'தான் டார்கெட்.. உதயசூரியனுக்கு வாய்ப்பில்லை! உஷாரான திருமாவளவன்.. 5 மாநிலங்களில் விசிக போட்டி
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பானை சின்னத்தில் போட்டியிட விசிக உறுதியாக இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விசிக போட்டியிடும் என கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி அறிவித்திருக்கிறார்.
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாஜக vs இந்திய கூட்டணி என்கிற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் தங்கள் செல்வாக்கை பலப்படுத்த முயன்று வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னத்தை வசப்படுத்த 5 மாநிலங்களில் களமிறங்க இருக்கிறது. இன்று கட்சியின் தென் மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை உறுதி செய்திருக்கிறார்.

"தெலங்கானாவில் 10, கர்நாடகாவில் 6, கேரளாவில் 3 லோக்சபா தொகுதிகளில் விசிக போட்டியிட முடிவு செய்திருக்கிறது. இந்த 3 மாநிலங்களில், விசிக இந்தியா கூட்டணியில் போட்டியிடவில்லை. ஆந்திராவில் இந்தியா கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் தொகுதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இந்தியா கூட்டணியில் போட்டியிடுவோம். இல்லையெனில் தனித்து போட்டியிடுவோம்" என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் தங்கள் கூட்டணியில் உள்ள விசிகவை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து முயன்று வருகிறது. காரணம் நாடாளுமன்றத்தில் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். எனவே, வெற்றி ஒன்றுதான் குறிக்கோள் என்கிற அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க விசிகவை திமுக வலியுறுத்தியது. ஆனாலும், விசிக பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், விசிக பானை சின்னத்திலேயே போட்டியிட்டது.
இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில் விசிகவை நிற்க வைக்க திமுக முயன்றிருக்கிறது. ஆனால், இதற்கு பிடி கொடுக்காமல் 5 மாநிலங்களில் போட்டி என திருமாவளவன் சாமர்த்தியமாக காய் நகர்த்தியுள்ளார். இப்படி போட்டியிடுவதன் மூலம் உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி திமுக கட்டாயப்படுத்த முடியாது.
இது குறித்து சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்திருந்த திருமாவளவன் விரிவாக கூறியிருந்தார். அதாவது, "கடந்த லோக்சபா தேர்தலின் போது வெற்றி என்பதை குறிக்கோளாக கொண்டிருந்ததால் ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டுமென திமுக வலியுறுத்தியது உண்மைதான். அப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது.
சட்டசபை தேர்தலில் ஆறு தொகுதிகளில் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டோம், வெற்றியும் பெற்றோம். அப்போது வெற்றி என்ற நோக்கிலேயே அந்த கருத்து முன்வைக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அத்தகைய கோரிக்கை வைக்கப்படவில்லை. எனவே இப்போதைக்கு அது ஒரு பிரச்சனை அல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றுதான் விரும்புகிறது" என்று விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications