Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விக்னேஷ் லாக்கப் டெத்...சட்டசபையில் அதிமுக அனல்... கொலை வழக்கு என முதல்வர் கூறியும் வெளிநடப்பு

விசாரணை கைதி மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என வழக்கு பதியப்பட்டு 3 போலீசார் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கைதி விக்னேஷ் மரணத்தில் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய உத்தரவு என முதல்வர் கூறிய நிலையில் சட்டசபையில் இருந்து அதிமுகஎம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். விசாரணை கைதி விக்னேஷ் உயிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தார்.

Recommended Video

    விசாரணை கைதி விக்னேஷ் மரணம்.. காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவு - முதல்வர் ஸ்டாலின்

    விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையானது எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஏற்கெனவே தலைமை செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் நேரில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல் விசாரணை கைதி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் விக்னேஷ், சொல்லு சுரேஷ் என்ற நபர்களை அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுநரிடமும் சிபிசிஐடி போலீசார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

    விக்னேஷை கைது செய்தபோது உடனிருந்த காவலர்களான, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தீபக், மற்றொரு ஊர்காவல்படையை சேர்ந்த வீரர் 3 பேர் ஆகிய 8 பேரை நாளை மாலை 5 மணிக்குள் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

    சட்டசபையில் விக்னேஷ் மரணம்

    சட்டசபையில் விக்னேஷ் மரணம்

    தமிழக சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். விக்னேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது உடலில் 13 இடங்களில் பலத்த காயம் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். விக்னேஷ் மரணத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.

    முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

    முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

    இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், விசாரணை கைதி மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என வழக்கு பதியப்பட்டு 3 போலீசார் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார். போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது எனவும் கூறினார். பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

    கொலை வழக்கு

    கொலை வழக்கு

    தலைமைச் செயலக காலனி காவல் நிலைய லாக்அப் மரணம் விவகாரத்தில் விக்னேஷ் பிரேத பரிசோதனையில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு, திருப்பூர் கொலை சம்பவங்கள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

    அதிமுக வெளிநடப்பு

    அதிமுக வெளிநடப்பு

    விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாததைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, விக்னேஷ் மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாகவும் 13 இடங்களில் படுகாயங்கள் இருப்பதாகவும் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+