கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறிய விஜய்? மவுனம் ஏன்? ரீல் டூ ரியல் மாறியது ஏன்?
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து 10 மாதங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவர் முன்பு அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருவது ஏன் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.
விஜய் அரசில் கட்சி ஆரம்பிப்பாரா? மாட்டாரா? அப்படி அரசியலில் இறங்கினால் எந்தக் கட்சியில் இணைவார் என்று பல ஆண்டுகள் முன்பாக பத்திரிகைகளில் நிறைய விவாதங்கள் நடத்து இருக்கின்றன. அவரது தந்தை சந்திரசேகர் தன் மகனை எப்படியாவது அரசியல் களத்திற்கு நகர்த்திக் கொண்டு வரவேண்டும் எனத் துடியாய் துடித்தார்.

விஜய் 'வேட்டைக்காரன்' படம் வெளியான நேரத்தில், அதாவது 2009 ஆம் ஆண்டு விஜய் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகத் தகவல் பரவியது. அவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி இருந்த நேரம். அப்போதுதான் விஜய்க்குப் புதுச்சேரியில் மக்கள் இயக்கம் மிகச் சிறப்பாக ஒரு நலப்பணி திட்டங்களை நடத்தியது. புதுவை முதல்வர் வைத்தியலிங்கத்துடன் புஸ்ஸி ஆனந்த் ஒரு தொடர்பு இருந்தது. அதன் மூலம் விஜய்க்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்தார். அவரை சந்திப்பதற்காக விஜய்யும் அவரது தந்தை சந்திரசேகரும் டெல்லி சென்று சந்தித்துவிட்டுத் திரும்பினார்கள்.
அப்போது பலரும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிக்கு விஜய் வருவார் என்றார்கள். தேசிய அளவில் விஜய்க்கு ஏதேனும் பதவி வழங்கப்படும். அதற்காகவே ராகுல் காந்தியே விரும்பி விஜய்யை அழைத்துள்ளார் என்றும் தகவல்கள் கசிந்ததன். இதைப் பற்றிக் குறைந்தது 10 நாட்களாக விஜய் மவுனம் காத்து வந்தார். ராகுல் சந்திப்பு பற்றி வாய் திறக்கவே இல்லை. பிறகு 'வேட்டைக்காரன்' படப்பிடிப்பிலிருந்த அவர் திடீரென்று ஊடகத்தைச் சந்தித்து விளக்கம் தர முன்வந்தார். அவருடன் தந்தை எஸ்.ஏ.சியும் இருந்தார்.
அன்று விஜய் பேசும்போது, "ராகுல் காந்தி என்னைச் சந்திக்க வேண்டும் என்று அவரே விரும்பி அழைப்பு விடுத்தார். அது மிகப்பெரிய வாய்ப்பு. ஆகவே, நானும் அப்பாவும் உடனடியாக டெல்லி சென்று சந்தித்தோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம். பல விசயங்கள் பற்றிப் பேசினோம். மக்கள் இயக்கம் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பேசினோம். ஆனால் உறுதியான முடிவுகள் எதையும் எடுக்கவில்லை. அதற்காகக் காலம் இது இல்லை. எதிர்காலத்தில் என்னை நம்பி இருக்கும் இளைஞர் சக்திகளை நான் வழி நடத்த வேண்டும். அதற்கு நான் அரசியலில் ஈடுபடவேண்டும்.
இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. நான் ராகுலைச் சந்தித்துப் பற்றி பலரும் பலவிதமாக எழுதி இருக்கிறார்கள். பத்திரிகைகளில் வந்த பல விசயங்களை நான் 10 நாட்களாகப் படித்தேன். அதைப் படிக்கும்போது இப்படி எல்லாம் நடந்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். எனக்கு எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறது. அது உடனே நடக்காது. எதிர்காலத்தில் நடக்கும்.

எனவே அது குறித்து ராகுல்காந்திக்கு எந்த உத்தரவாதமும் தரவில்ல. அவரை சந்தித்ததை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். அது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. இப்போதைக்கு நான் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அதான் என் இலக்கும்" என்று விளக்கமாகப் பதில் அளித்திருந்தார்.
இந்தச் சந்திப்பில் விஜய் பத்திரிகையாளர்களிடம் ஒரு வாக்குறுதியை அளித்து இருந்தார். அவர் இன்றைக்கு அதை மறந்து இருக்கலாம். அந்த வாக்குறுதி என்ன என்ன? அன்று விஜய் பேசும் போது, "எனக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் வந்தால், அதை ஊடகத்தினரைச் சந்தித்து முறையாக அறிவித்துவிட்டுத் தான் தொடங்குவேன். அது உறுதி. உங்களிடம் சொல்லாமல் கட்சி ஆரம்பிக்க மாட்டேன்" என்று கூறி இருந்தார்.
ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தார். மாநாட்டைக் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடத்தினார். அவர் கடந்த 2009இல் ஊடகத்தைச் சந்தித்துச் சொல்லிவிட்டுத்தான் கட்சியை அறிவிப்பேன் என்பதை மட்டும் மறந்தே போய்விட்டார். இதுவரை ஒருமுறைகூட அவர் சந்திக்கவே இல்லை. இந்த வாக்குறுதியை அவர் ஏன் நிறைவேற்றவில்லை.
ரஜினிகாந்த் கூட கட்சி தொடங்குவதற்கு முன்னால் ஒரு ஊடக சந்திப்பை நடத்தினார். ஆனால்,மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய விழா, கட்சி தொடங்கியதற்காக ஒருமுறை கூட ஊடகத்தைச் சந்தித்து பேட்டி அளிக்கவில்லை. அதற்கு நேரம் ஒதுக்குவாரா? கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா?
-
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல்












Click it and Unblock the Notifications