Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினியே எதிர்பாராத டுவிஸ்ட்.. “தளபதி காக்காதான்!” கழுகு தனியா தின்னும் - விஜய் ரசிகர் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சொன்ன காக்கா, கழுகு கதையை வைத்து அவருக்கே பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார் விஜய் ரசிகர். அப்படி என்ன சொன்னார்.. விரிவாக பார்ப்போம்.

சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விஜய் மக்கள் இயக்கத்தை சசி என்ற ரசிகர், "விஜய் ரசிகர்கள் ரஜினி படத்தையும் பார்ப்போம். ஆனால், சமீப காலமாக ரஜினிகாந்தின் செயல்பாடுகள் விஜய்யை விமர்சிப்பதைபோல் உள்ளது. இவர் வழக்கம்போல் குட்டிக் கதை சொல்வார். அதில் எந்த பிரச்சனையும் இல்லை

Vijay fans blasts actor Rajinikanth on his Crow and Eagle story
.

ஆனால், இப்போது சொன்னது விஜய்யை சாடுவதுபோல் உள்ளது. அவர் கழுகு போலவும், நான் காக்கா போன்றும் அவர் பேசி இருக்கிறார். நாங்கள் உயர உயர பறப்போம். காக்கா ஓரளவு தான் பறக்கும் என்று பேசி இருக்கிறார். இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். அவருக்கு நாங்கள் சொல்வது என்னவென்றால், கழுகு தான்தின்னிப் பறவை. தனியாக சாப்பிடும்.

காக்கா அப்படி இல்லை. விஜய்யை காக்கா என்றே சொல்லட்டும். அது சக பறவைகளை அழைத்து உணவு உண்ணும். அதிலும் நாங்கள் சிறப்பு தானே. அதுமட்டுமில்லாமல் இவர் எதற்கும் குரல் கொடுத்ததைபோல் தெரியவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை சமூக விரோதிகள் உள்ளே இருப்பதாக கூறினார்.

அதே நேரம் விஜய் படப்பிடிப்பை விட்டுவிட்டு நள்ளிரவில் சென்று 12 பேரின் வீட்டுக்கு சென்று நிதி பங்களிப்பு கொடுத்தார். அதேபோல் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். இவர் தலைவர் என்றால் வெறும் ரசிகர்களுக்கு மட்டும் தலைவர் இல்லை. அவர் என்ன செய்கிறார் என எல்லா கட்சிகள் பார்க்கிறார்கள்.

அடுத்து அவர் அரசியலை நோக்கிதான் வந்துகொண்டு உள்ளார். மக்களின் குரலாக அவர் எதிரொலிக்கிறார். இன்று நேற்று அல்ல. 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து ரசிகர்களையும் அழைத்து மீனவர்களுக்கு ஆதரவாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். அதை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வந்தார்.

எவ்வளவோ நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வர வேண்டியது தானே?அவர் நடிப்பதாக சொல்கிறார்கள். நடிப்பதற்கும் ஒரு மனப்பான்மை வேண்டும்தானே. நீட் தேர்வால் இறந்த அனிதா வீட்டுக்கு நள்ளிரவு சென்று உதவி செய்தார். இதெல்லாம் சமூகத்தின் மீதுள்ள அக்கறை. அவர் நன்றாக வளர்ந்து வரும் பச்சைத் தமிழன்.

தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி இதுதான். விரைவில் முதல் கட்சியாகிவிடும். திமுக, அதிமுகவுக்கு மாற்று நாங்கள் என்று எவ்வளவோ பேர் வருகிறார்கள். ஆனால், விஜய்தான் அமைதியாக கொண்டு வருகிறார். விரைவில் அவர் கண்டிப்பாக வருவார். ஒட்டுமொத்த தொண்டர்கள், மக்களும் அவரை நம்ப தொடங்கிவிட்டார்கள்.

திமுக, அதிமுக என்று 50 ஆண்டுகாலம் எந்த மாற்றமும் இல்லை. விஜய் படை திரட்டி செய்யவில்லை. அமைதியாக செய்கிறார்கள். மாணவர்கள் நிகழ்ச்சி என்றால் அவர்கள் புரியும் வகையில் செயல்படுகிறார். அப்பா அம்மாவிடம் வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என சொல்கிறார்.

இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நல்ல மாற்றத்தை அவர் தருவார். ரஜினிகாந்துக்கு விரக்தி. என்னவென்றால் நாம் சூப்பர் ஸ்டாராக இருந்தோம். அதை அவரே ஒரு மேடையில் பேசும்போது, 'நான் கோவை சென்றேன். அங்கே எனக்கு எப்போதும் ஒரு மாஸ் இருந்தது. ஆனால், இப்போது எனக்கு பிறகு ஒரு நடிகர் வந்தார்.

ஏர்போர்ட் ஊழியர்கள் என்னிடம் இருங்கள், ஒரு பெரிய படத்தின் நடிகர் போகிறார் என்று சொன்னார்.' என ரஜினி விரக்தியாக பேசினார். விஜய் அவருடைய இடத்திற்கு வந்துவிட்டார் என்ற விரக்தி ஒன்று. அடுத்து அரசியலில் அவர் பின்வாங்கிவிட்டார் என்ற விரக்தி. வருவேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. அந்த விரக்தியின் வெளிபாடுதான் காக்கா, கழுகு கதை." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+