"சென்னையில் வீடின்றி தவிக்கிறேன்! நீலாங்கரை வீட்டில் வாழ விஜய் தடுக்கிறார்!" சங்கீதா குற்றச்சாட்டு
சென்னை: "சென்னையில் எனக்கென வீடின்றி தவிக்கிறேன். என்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார்" என சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கெனவே விவாகரத்து வழக்கில் விஜய் குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான கருத்துகளை தெரிவித்திருந்த நிலையில் சங்கீதா புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை. விவாகரத்து கோரியுள்ளதால் தற்போது சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். என்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார். அந்த வீட்டில் எனக்கும் சரி பங்கு இருக்கிறது என சங்கீதா தெரிவித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: நீலாங்கரை வீட்டில் நான் வசிக்க விஜய் அனுமதிக்க மறுக்கிறார். பிரிட்டன் குடியுரிமை கொண்ட எனக்கு சென்னையில் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்ப வீடு இல்லை. எனவே விவாகரத்து முடியும் வரை நீலாங்கரை வீட்டிலேயே நான் தங்க அனுமதிக்க வேண்டும்.
அந்தஸ்து
இல்லாவிட்டால் அவர் அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு வீட்டில் என்னை தங்க வைக்க வேண்டும். விவாகரத்து முடியும் வரை எனக்கு விவாகரத்துக்கு பிறகு நான் வேறு ஒரு வீட்டிற்கு சென்றுவிடுகிறேன். கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சங்கீதா விவாகரத்து
கடந்த வாரம் பிப்.28 ஆம் தேதி சங்கீதா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் விஜய்யுடன் எனக்கு 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் எங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது.
2021 ஆம் ஆண்டு தெரிந்தது
அதன் பின்னர் அவருக்கும் ஒரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதை நான் 2021 ஆம் ஆண்டு அறிந்தேன். இது குறித்து அவரிடம் கேட்ட போது, அவர் அந்த நடிகையை விட்டுவிடுவதாக தெரிவித்தார்.
கள்ளத்தொடர்பு
ஆனால் அந்த நடிகையுடன் அவர் இன்று வரை கள்ளத்தொடர்பில் இருந்து வருகிறார். அவரை நம்பிய எனக்கு துரோகம் செய்துவிட்டார். என்னை மன ரீதியாக துன்புறுத்துகிறார். என்னை ஒதுக்கிவைத்துவிட்டு அந்த நடிகையுடன் வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்கிறார்.
அவமானம்
அவ்வாறு அவர் செல்லும்போது எடுக்கப்படும் புகைப்படங்களை அந்த நடிகை சமூகவலைதள பக்கத்தில் வெளியிடுகிறார். இது எனக்கும், என் குழந்தைகளுக்கும் அவமானத்தை தருகிறது. எனவே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தர வேண்டும். மேலும் கணவரின் இமேஜை கருத்தில் கொண்டு அவரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசை சொன்னது என்ன
இதுகுறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது: "இந்த விவகாரம் தனிப்பட்ட விவகாரம் என்றாலும் நாளை மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் சங்கீதா போன்றோருக்கு கூட நியாயம் கிடைக்க வேண்டும். அவர் சிரமத்தில் இருப்பதாகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் " என தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷாவுடன் விஜய் சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர்கள் இருவரும் ஒரே நிற ஆடை அணிந்திருந்தனர். இந்த நிலையில் சங்கீதா தனது புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மகளிர் தினம்
நாளை மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் தவெக சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் விஜய் மீது சங்கீதா இப்படிப்பட்ட புகாரை அளித்திருக்கிறார்.
-
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்! -
ரூ. 20 லட்சம் கடன் தருவோம்.. இளைஞர்களை ஈர்க்க மேஜர் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த தவெக தலைவர் விஜய்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி












Click it and Unblock the Notifications