வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல்கள் ஒருவழியாக முடிவுக்கு வந்ததாக தோன்றிய நிலையில், தற்போது புதிய சவால் ஒன்று எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு முன் உருவாகியுள்ளது. முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பொறுப்பாளர்கள் என அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது அதிமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் உட்கட்சி பிரச்சனைகளை சமாளிக்க முயற்சிக்கும் அதிமுக தலைமை, மறுபுறம் தவெக நோக்கி நகரும் நிர்வாகிகளை தடுக்க முடியாமல் தவித்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதனால் "அதிமுகவின் அஸ்திவாரமே ஆட்டம் காணத் தொடங்கியுள்ளதா?" என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Vijay AIADMK

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் நிலவிய சூழல் யாராலும் எளிதில் மறக்க முடியாத ஒன்று. தொடர் தோல்விகளால் அதிருப்தி அடைந்த ஒரு தரப்பு, கட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என்று குரல் எழுப்பியது.

அதிமுக

மற்றொரு தரப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக களமிறங்கியது. இதனால் கட்சி இரண்டாக உடையும் நிலை உருவானது. எனினும் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அணியும், எஸ்.பி. வேலுமணி அணியும் சமரசமாக கைகோர்த்தன. இதனால் கட்சியில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நிம்மதி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

மரகதம் குமரவேல்

முதலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்த சம்பவம் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். அவர் வெளியிட்ட கருத்துகள் அதிமுகவுக்குள் மேலும் விவாதத்தை ஏற்படுத்தின.

எடப்பாடி பழனிசாமி

தேர்தல் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் பொறுப்பேற்கவில்லை என்றும், ஜெயலலிதா இருந்திருந்தால் தோல்விக்கான பொறுப்பை தானே ஏற்றிருப்பார் என்றும் அவர் கூறியது அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளானது. மேலும், ஒருகாலத்தில் 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக தற்போது சிதறி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதோடு, தமிழக அரசியலில் முதல்வர் விஜய் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டியிருந்தார்.

டாக்டர் சரவணன்

இதற்குப் பிறகு மதுரை வடக்கு தொகுதியின் முன்னாள் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனும் தவெகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் தவெக தலைமையகத்திற்குச் சென்று உறுப்பினர்களாக இணைந்தனர். குறிப்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் தவெகவில் இணைந்தது அரசியல் ரீதியாக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை தவெகவுக்கு வலுவான தொழிற்சங்க கட்டமைப்பு இல்லை.

அதிமுக தொண்டர்கள்

தற்போது அதிமுகவில் இருந்த நிர்வாகிகள் இணைவதன் மூலம் புதிய தொழிற்சங்க அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமின்றி, பல மாவட்டங்களிலும் அதிமுகவின் கிளை, வட்ட மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் தவெக நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலைமை அதிமுக தலைமையை கவலை அடையச் செய்துள்ளது.
இதற்கிடையே, தவெக முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "90 சதவீத அதிமுக தொண்டர்கள் தவெகவில் இணைய தயாராக உள்ளனர்" என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர் தேர்தல் தோல்விகள்

இந்தக் கருத்து அரசியல் ரீதியாக மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்றாலும், அதிமுகவின் அடிமட்டத்தில் அதிருப்தி நிலவுகிறது என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளது. அதிமுகவினர் வெளியேறுவதற்கு ஒரே காரணம் இல்லை. தொடர் தேர்தல் தோல்விகள், தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சித் தலைமை வெளிப்படையாக ஆய்வு செய்யாதது, கேள்வி எழுப்பியவர்களை ஓரங்கட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள், புதிய தலைமுறைக்கு வாய்ப்பு வழங்கப்படாதது உள்ளிட்ட பல காரணங்கள் சேர்ந்து இந்த நிலையை உருவாக்கியுள்ளன.

தவெக ஆட்சி

அதோடு, தேர்தலுக்குப் பிறகு திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயன்றதாக வெளியான தகவல்களும் சில தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த குற்றச்சாட்டுகளை அதிமுக தலைமை மறுத்திருந்தாலும், அது கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
மறுபுறம், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் இருப்பதால், எதிர்கால அரசியல் வாய்ப்புகளை கருதி சிலர் அந்தக் கட்சியை நோக்கி நகர்வதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக வாக்கு வங்கி

ஆளுங்கட்சியில் இருந்தால் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்ற அரசியல் கணக்கும் இதில் இருப்பதாக பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும், அதிமுக இன்னும் தமிழகத்தின் முக்கிய அரசியல் சக்திகளில் ஒன்றாகவே உள்ளது. பல மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கி மற்றும் கட்டமைப்பை அந்தக் கட்சி தொடர்ந்து வைத்திருக்கிறது. ஆனால் அந்த கட்டமைப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தற்போது முழுமையாக எடப்பாடி பழனிசாமி தோள்களில் வந்து விழுந்துள்ளது.

கட்சிக்குள் அதிருப்தி

கட்சிக்குள் நிலவும் அதிருப்திகளை களைந்து, நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறைக்கு இடமளித்து, தோல்விக்கான காரணங்களை நேர்மையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தலைமை உள்ளது. இல்லையெனில் தற்போது தனித்தனியாக நடைபெறும் விலகல்கள், எதிர்காலத்தில் பெரிய அரசியல் சவாலாக மாறக்கூடும் என்ற எச்சரிக்கையும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

ஈபிஎஸ்

அதிமுகவின் அஸ்திவாரம் உண்மையிலேயே ஆட்டம் காண்கிறதா அல்லது இது தேர்தல் தோல்விக்குப் பிறகான தற்காலிக அதிர்வா என்பது வரும் மாதங்களில் தெரியவரும். ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மனநிலையை புரிந்து கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஈபிஎஸ்-க்கு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+