அம்பேத்கர் பெயரை ம்யூட் செய்த விஜய் டிவி! பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ஆனால் இந்த சீசனில் நிகழ்ச்சி ரசிக்கும்படியாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக டாக்டர் அம்பேத்கர் பெயரை விஜய் டிவி ம்யூட் செய்திருப்பதால் இந்த விமர்சனங்கள் மேலும் வலுவடைந்திருக்கிறது.
கடந்த 9 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வந்தது. தொடக்கத்தில் இதனை கமல்ஹாசன் ஒருங்கிணைத்து வந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி ஒருங்கிணைத்து வருகிறார்.

ஆரம்பத்தில் என்னவோ நல்லாதான் இருந்தது. ஆனால், இப்போ நிகழ்ச்சியின் தரம் மோசமானதாக மாறியிருக்கிறது என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியை தொடக்கத்தில் பார்த்ததாகவும், தற்போது குழந்தைகளுடன் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க முடிவதில்லை என்றும் கூறி வருகின்றனர். அத்துமீறுதல், இரட்டை அர்த்தத்தில் பேசுதல், வன்மம் போன்றவை இந்நிகழ்ச்சியில் அதிகரித்து வருகிறது என்று பலர் விமர்சித்திருக்கிறார்.
இந்த பஞ்சாயத்துகளுக்கு நடுவில்தான் தற்போது சீசன் 9 நடந்து வருகிறது. இதிலும் ஏகப்பட்ட சலசலப்புகள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆட்தேர்வில் பிக் பாஸ் சொதப்பியுள்ளது, முக்கியத்துவம் இல்லாத ஆட்களை தேர்ந்தெடுத்திருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு பிரச்சனை எழுந்திருக்கிறது. அதாவது ஸ்கூல் டாஸ்க் நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்களில் ஒருவரான கானா வினோத் டாக்டர் அம்பேத்கரின் வாசகத்தை மேற்கோளிட்டு பேசினார். "நீ கற்ற கல்வி உன் சமுதாயத்திற்கு பயன்படவில்லை என்றால், நீ கற்றதில் பயன் இல்லை என பாபாசாகேப் அம்பேத்கர் கூறியிருக்கிறார்" என்று பேசினார். ஆனால் இது ஒளிபரப்பப்பட்டபோது, அம்பேத்கரின் பெயர் மட்டும் ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.
இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அம்பேத்கர் சட்டமேதை. அவர் வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி நாயகன். அரசியல் கட்சிகளோடு மட்டும் அம்பேத்கரை பொருத்தி பார்ப்பது என்பது சரியில்லை. 'அம்பேத்கர்' என்பது அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய் டிவியின் நடவடிக்கைக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
-
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பிளான் கேட்டு அதிர்ச்சியில் விஜயா.. இனியாவது திருந்துவாரா? மனோஜ்க்கு அசிங்கம் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications