பெரியார், அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்த விஜய்! அலங்கார வளைவின் டிசைனை பார்த்தீங்களா?
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ள நிலையில் அவர், பனையூரில் இன்று கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மேலும் தலைவர்களின் சிலைகளையும் திறந்து வைத்தார்.
எல்லாவற்றுக்கும் மேல் இன்று விஜய் தனது சுற்றுப்பயண விவரத்தையும் அறிவிக்கிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவேன் என கூறிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தொடங்கினார்.

அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்தார். மேலும் தங்கள் கட்சியின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். பிறகு அவர் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பிரம்மாண்டமான மாநாட்டை விக்கிரவாண்டியில் தொடங்கி வைத்தார். அப்போது அவரது கட்சியின் கொள்கைகளையும் கொடிக்கான அர்த்தத்தையும் விளக்கியிருந்தார்.
அந்த வகையில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் அவ்வப்போது அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். நேற்று கூட பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் இல்லை என்பதை குறிப்பிட்டிருந்தார். அதே நேரம் வருமான வரி விலக்கை பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் இன்று விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றதுது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது அவர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பிறகு கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாலத்திள் ஆகியோரின் சிலைகளையும் அவர் திறந்து வைத்தார். அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினார். சிலை வைக்கப்பட்ட இடத்திற்கு பின்னால் வாகை மலர் அலங்கார வளைவு போல் இடம்பெற்றுள்ளது.
பின்னர் மாணவர்களுக்கு மடிக்கணினி, உள்ளிட்ட நல திட்டங்களையும் வழங்குகிறார்.5ஆம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்களின் பட்டியலையும் அவர் வழங்குகிறார். விஜய்யை காண கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications