பேச முடியாது.. சிரித்தபடி சைகை காட்டிய விஜயகாந்த்.. நெகிழ்ந்து போன நிருபர்கள்!
Recommended Video

சென்னை: செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்களைப் பார்த்து சிரித்தபடி தன்னால் பேச முடியாது என்று தனது தொண்டையைக் காட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சைகை காட்டியபோது செய்தியாளர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
அதிமுக கூட்டணியில் இன்று தேமுதிக இணைந்தது. 4 தொகுதிகளில் அது போட்டியிடவுள்ளது. இதையொட்டி கிரவுன் பிளாசா ஹோட்டலில் ஒப்பந்தம் கையெழுத்தானது தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் செய்தியாளர்களை அனைவரும் கூட்டாக சந்தித்தனர். செய்தியாளர் கூட்டத்திற்கு விஜயகாந்த்தை கைத்தாங்கலாக அழைகத்து வந்த அமர வைத்தனர். அப்போது செய்தியாளர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் சரமாரியாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். அதை தனக்கே உரிய வெள்ளந்தி சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.
அப்போது செய்தியாளர்களைப் பார்த்து சிரித்தபடி தனது தொண்டையை சுட்டிக் காட்டி பேச முடியாது என்று அவர் சைகை காட்டிக் கூறினார். இதைப் பார்த்து செய்தியாளர்கள் நெகிழ்ந்து போனார்கள். எத்தனை கேள்விகள் கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லும் அல்லது தனது தரப்பை நியாயப்படுத்த கடுமையாக வாதாடும் அந்த பழைய விஜயகாந்த்தை நினைத்துப் பார்த்து நிருபர்கள் வருத்தமடைந்தனர்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். சிரித்த முகத்துடன் காணப்பட்ட அவரைப் பார்த்து செய்தியாளர்களும் கூட உற்சாகமடைந்தனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications