வீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம!
சென்னை ;தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார். அவஐருடன் வந்த தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீசும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளது.
Aavin milk new Price list : ஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு
தமிழகத்தின் முதல்வராக முதல்முறையாக முக ஸ்டாலின் கடந்த மே 7ம் தேதி பதவி ஏற்றார். அவருக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.
தலைவர்கள் வாழ்த்து
தேசிய அளவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், பல்வேறு மாநில எதிர்க்கட்சி தலைவர்கள், எம்பிக்கள் ஸ்டாலினை போனில் அழைத்தும, ட்விட்டரிலும் வாழ்த்து தெரிவித்தனர்.
எல்.கே.சுதீஷ்
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் இன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் வென்று முதல்முறையாக எம்எல்ஏ ஆன நிலையில், பல்வேறு முக்கிய தலைவர்களை வீடு தேடி நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் அவரது வீடு தேடி சென்று சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதனை கண்டு விஜயகாந்த் குடும்பத்தினர் நெகிழ்ந்து போயினர்.
வரவேற்ற ஸ்டாலின்
இந்நிலையில் தான், தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவிக்க விரும்பினர். இதை அறிந்த ஸ்டாலின் அவர்களை வரவேற்றார். அங்கு சிறிது நேரம் பேசிவிட்டு, வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
தேர்தலில் தோல்வி
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகு கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக, தொகுதி பங்கீடு ஒத்துவராததால், கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகியது. அமமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது . ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோலவியை சந்தித்துள்ளது.