ஈழப்போர் நடந்துகிட்டு இருந்தப்ப.. சீமான் என் கூடதான் இருந்தாரு.. சிவந்த கண்களுடன் விஜயலட்சுமி வீடியோ
சென்னை: ஈழப்போர் நடந்துகிட்டு இருந்த போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடன் இருந்ததாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி, சீமான் பிரச்சினை அவ்வப்போது துளிர்த்து பின்னர் அப்படியே அடங்கிவிடும். அந்த வகையில் தற்போது மீண்டும் இந்த பிரச்சினையை விஜயலட்சுமி கிளப்பியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு வாழ்த்துகள் படத்தில் நடித்த போது சீமான் தன்னுடன் நெருங்கி பழகியதாகவும் தன்னை கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி ஏமாற்றியதாகவும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
தன்னை ஏமாற்றிவிட்டு 2013 இல் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டார் சீமான். தன்னை சீமான் ஏமாற்றியதால் அவ்வபோது சீமான் குறித்து அவதூறு பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு வருவார். அதற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவிப்பதோடு விஜயலட்சுமியை அவதூறாக பேசி கமென்ட் போடுவர் .
இதனால் ஒரு கட்டத்தில் மனஉளைச்சல் அடைந்த விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றார். அவரை டான்ஸ் மாஸ்டர் காயத்ரி மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இந்த நிலையில் தற்போது தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமியுடன் இணைந்து சீமான் கேஸை மீண்டும் தூசு தட்டி எடுத்துள்ளார் விஜயலட்சுமி.
கடந்த வாரம் சீமானை கைது செய்ய வேண்டும் என வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து பேசுவதை கேவலமாக இருப்பதாக சீமான் பிரஸ்மீட்டில் தெரிவித்தார். மேலும் தன்னை திருமணம் செய்து கொண்டதற்கான புகைப்படத்தை விஜயலட்சுமி வெளியிடட்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் தன்னை இரு லட்சுமிகளை கொண்டு ஒடுக்கிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விஜயலட்சுமி இதே போல் 6 பேர் மீது புகார் அளித்துள்ளார் என்றும் தான் 7ஆவது நபர் என்றும் தெரிவித்துள்ளார் சீமான். இதை டிவி பேட்டிகளில் பார்த்த விஜயலட்சுமி கடும் கோபத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நான் இதுவரை 6 பேர் மேல் புகார் கூறியிருக்கேனா, அப்ப நீ 7ஆவது நாமம் போட்டுக்க என் கிட்ட வந்தீயா, நான் 6 பேர் மேல புகார் கொடுத்திருந்தா எனக்கு எதுக்கு மார்ச் மாதம் காசு போட்டே. ஈழ போர்ல மக்கள் செத்துகிட்டு இருந்தப்ப நீ என் கூட ஆட்டம் போட்டுகிட்டு இருந்தியே. வேண்டாம் சீமான், சும்மா பெண்ணோட வாழ்க்கையில் விளையாடாதே.
செய்த தவறை உணர்ந்தால் பிரச்சினை சரியாகும். இல்லாவிட்டால் நான் விட மாட்டேன். மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறாய் என்றெல்லாம் சீமானை விஜயலட்சுமி ஒருமையில் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விஜயலட்சுமியின் கண்களில் அத்தனை கோபம் கொப்பளிக்கிறது.












Click it and Unblock the Notifications