ஆதவ் அர்ஜுனா துணை முதலமைச்சர்! வில்லிவாக்கத்தில் மேஜிக்! சட்டென சரிந்த திமுக!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களமிறங்கியிருந்த ஆதவ் அர்ஜுனா, திமுக வேட்பாளரை விட முன்னிலையில் இருக்கிறார்.
வில்லிவாக்கத்தில் திமுக சார்பில் கார்த்திக் மோகன் களமிறங்கியிருந்தார். இந்த தொகுதி பராம்பரியமாக திமுகவின் கோட்டை என்பதால், நிச்சயம் இந்த முறை திமுகதான் ஜெயிக்கும் என்று பலரும் கணித்திருந்தனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூட, திமுகதான் ஜெயிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் நிலைமை அப்படியே தலைகீழாய் மாறியிருக்கிறது. வில்லிவாக்கத்தில் தற்போது வாக்கு எண்ணிக்கை 3வது சுற்று முடிந்திருக்கிறது.
ஆதவ் அர்ஜுனா 12715
கார்த்திக் மோகன் 9295
என வாக்குகளை பெற்றிருக்கின்றனர். கார்த்திக் மோகனை விட ஆதவ் அர்ஜுனா சுமார் 3420 ஓட்டுகளை கூடுதலாக பெற்றிருக்கிறார். இன்னும் 16 சுற்றுகள் இருக்கின்றன. இடையில் இந்த நிலவரம் அப்படியே மாறவும் செய்யலாம்.
ஒருவேளை தவெக வெற்றிப் பெற்றால் நிச்சயம் ஆதவ் அர்ஜுனா துணை முதலமைச்சர் பதவியைதான் கேட்பார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோல, தற்போது தவெக 108 தொகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. எனவே, வெற்றி உறுதியானால் ஆதவ் அர்ஜுனா நிச்சயம் துணை முதலமைச்சர் ஆவார் என்று சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications