முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிக்கு எதிராக... சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் வழக்கு
சென்னை: விராலிமலை தொகுதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அத்தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், 23 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவை வினியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார் எனவும், அதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததைச் செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், வாக்குகளைக் கவர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமாகச் செலவு செய்துள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டுக் கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அரசியலுக்கு வர்றாங்க மு.க.அழகிரி மகள்? கனிமொழிக்கு பின் கயல்விழி Entry.. மாமதுரையே பத்திக்கிச்சு! -
ஆர்பி உதயகுமாருக்கு செக்.. ஓபிஎஸ் நடத்தும் பிரம்மாண்ட இணைப்பு விழா.. திமுகவில் இணையும் 1 லட்சம் பேர் -
திமுக காங்கிரஸ் கூட்டணி LIVE: திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது! முழு விவரம்! -
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு! -
"Over" திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிந்த பின்.. வெளியில் வந்து ஸ்டாலின் கொடுத்த சிக்னல்! -
எகிறிய காங்கிரஸ்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த ஸ்டாலின்.. திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது எப்படி? -
திமுகவை தொடங்கிய ஒரே ஆண்டில் சிறைக்குள் அண்ணா! பக்கத்து அறையில் பெரியார்! -
கூட்டணி ஆட்சி முழக்கம் மொத்தமா மங்கிப் போச்சு.. காங்கிரஸ் தலைகளுக்கு செக் வைத்த திமுக! -
கலைந்துவிடும் நிலைக்கு சென்ற திமுக காங்கிரஸ் கூட்டணி.. கடைசி நேரத்தில் ஒப்பந்தம்.. என்ன நடந்தது? -
ராஜ்யசபா வேட்பாளர்கள்: தேமுதிக சுதீஷ், பாமக அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் வேட்பு மனு தாக்கல் -
“அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல! ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்!” - ஸ்டாலின் -
"All Finished"! அந்த சைகையை நான் திட்டமிட்டு காட்டவில்லை! ஸ்டாலின் விளக்கம்!












Click it and Unblock the Notifications