"இடிக்குதே".. சசிகலாவும், தினகரனுமா.. ஒரே ஆச்சரியம்.. கூடவே வந்த "எம்ஜிஆர்".. இது எப்படி நடந்தது?
சசிகலா, டிடிவி தினகரன் மே தின வாழ்த்து சொல்லி உள்ளனர்
சென்னை: சொல்லி வைத்ததுபோலவே, டிடிவி தினகரனும், சசிகலாவும் ஒரே மாதிரியான வாழ்த்துக்களை உதிர்த்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு, அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு, அந்நிய செலாவணி வழக்கு, கொடநாடு வழக்கு, என சசிகலா எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனைகள் முட்டிக் கொண்டு நிற்கின்றன.
மற்றொரு பக்கம், தன்னை வரவேற்கும் அல்லது ஆதரிக்கும் நிர்வாகிகளை தினகரன் கட்சியில் இருந்து நீக்கி கொண்டிருப்பதும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது..

அமமுக - சசிகலா
நாளுக்கு நாள் தினகரன் - சசிகலா இடையேயான விரிசல் அதிகமாகி கொண்டே போகிறது.. சிறைக்கு சென்றபோது, கட்சியையும், ஆட்சியையும் தினகரனிடம் ஒப்படைத்து சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தால், அமமுக கட்சிப் பதவி கூட அவருக்கு இல்லாத வகையில், அனைத்தையும் காலி செய்து வைத்திருந்தார் தினகரன்.. பல முக்கிய தலைகளும் திமுகவுக்கு பறந்துவிட்ட நிலையில், வலுவிழந்து கிடக்கும் அமமுகவை கண்டு கொந்தளித்துள்ளார்.நாளுக்கு நாள் தினகரன் - சசிகலா இடையேயான விரிசல் அதிகமாகி கொண்டே போகிறது.. சிறைக்கு சென்றபோது, கட்சியையும், ஆட்சியையும் தினகரனிடம் ஒப்படைத்து சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தால், அமமுக கட்சிப் பதவி கூட அவருக்கு இல்லாத வகையில், அனைத்தையும் காலி செய்து வைத்திருந்தார் தினகரன்.. பல முக்கிய தலைகளும் திமுகவுக்கு பறந்துவிட்ட நிலையில், வலுவிழந்து கிடக்கும் அமமுகவை கண்டு கொந்தளித்துள்ளார்.நாளுக்கு நாள் தினகரன் - சசிகலா இடையேயான விரிசல் அதிகமாகி கொண்டே போகிறது.. சிறைக்கு சென்றபோது, கட்சியையும், ஆட்சியையும் தினகரனிடம் ஒப்படைத்து சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தால், அமமுக கட்சிப் பதவி கூட அவருக்கு இல்லாத வகையில், அனைத்தையும் காலி செய்து வைத்திருந்தார் தினகரன்.. பல முக்கிய தலைகளும் திமுகவுக்கு பறந்துவிட்ட நிலையில், வலுவிழந்து கிடக்கும் அமமுகவை கண்டு கொந்தளித்துள்ளார்.

டிடிவி தினகரன்
கட்சியை கலைக்க சொன்னாலும் தினகரன் கலைக்கவில்லை என்பதால், அமமுக என்ற கட்சியையே ஆதரிக்காமல், அதிமுகவை மட்டுமே குறி வைத்து சசிகலாவின் அரசியல் நகர்கிறது.. இவர்களின் விரிசல் எப்போது தீருமோ என்று தென்மண்டல நிர்வாகிகள் காத்து கிடக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், நாளை மே தினத்தை முன்னிட்டு, சசிகலாவும், தினகரனும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.. எதேச்சையாக வெளியிட்ட அறிக்கை என்றாலும், இருவரும் சொல்லி வைத்ததுபோலவே எம்ஜிஆர் பாட்டை அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மனித நாகரீகம்
சசிகலா வாழ்த்து செய்தியில், இந்த உலகம் உழைப்பவர்களால் மட்டுமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. உடலினை இயந்திரமாக்கி, உதிரத்தை வியர்வையாக சிந்தி, மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய தொழிலாளர்கள், எட்டு மணி நேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய' உரிமையாக போராடிப் பெற்ற நாளே தொழிலாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

ஒன்று எங்கள் ஜாதியே
உழைப்பாளர்களுக்குள் ஏற்ற, தாழ்வு இல்லை; அவர்களிடையே வேறுபாடு இல்லை; உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமமானவர்களே இதைத் தான் புரட்சித் தலைவர் அவர்கள், ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும், ஒருவர் பெற்ற மக்களே!"என்று உழைப்பின் மாண்பினையும், உழைப்பாளர்களின் பெருமையையும் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தினார். நம் அம்மா அவர்களும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்தார். எனதருமை தொழிலாளர் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video

எம்ஜிஆர்
அதுபோலவே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், "ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!" என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பட பாடல் வரிகளை உண்மையாக்குவோம். மே தினத்தில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் உழைப்பவர்களை பெருமிதத்தோடு கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார்.. இருவரும் ஒரே பாடலை, ஒரே நேரத்தில் பதிவிட்டுள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.. எடப்பாடி பழனிசாமி என்ன சொல்ல போகிறார் என்று தெரியவில்லை அதையும் பார்ப்போம்...!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications